பேராதனை பல்கலைகழக ஐந்து மாணவர்களின் முறையற்ற நடத்தையால் கலிகமுவ பிரதேசத்தில் சல சலப்பு சூழ்நிலை உருவாகி பொலிசாரின் தலையீட்டால் நிலைமை சீரானதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
கலிகமுவ பிரதேச பீங்கான் கூட்டுத்தாபன வீதியில் உள்ள ஓயா ஒன்றுக்கு அருகில் பேராதனை பல்கலைகழக மாணவர்கள் நால்வரும் ஒரு மாணவியும் மது அருந்திய நிலையில் இருந்துள்ள அதேவேளை குறித்த மாணவியை மாணவர்கள் மூவரும் நிர்வாணமாக படம் பிடித்துள்ளனர்.
தகவல் அறிந்து பிரதேசத்தில் குவிந்த சுமார் இருநூறுக்கும் அதிமான பிரதேசவாசிகள் மாணவர்களை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
No comments:
Post a Comment