Monday, July 27, 2015

பேராதெனிய மாணவ – மாணவிகள் தகாத வேலையில்

பேராதனை பல்கலைகழக ஐந்து  மாணவர்களின் முறையற்ற நடத்தையால் கலிகமுவ பிரதேசத்தில் சல சலப்பு  சூழ்நிலை உருவாகி பொலிசாரின் தலையீட்டால் நிலைமை சீரானதாக எமது செய்தியாளர்  குறிப்பிட்டார்.

கலிகமுவ பிரதேச பீங்கான் கூட்டுத்தாபன வீதியில் உள்ள ஓயா ஒன்றுக்கு அருகில் பேராதனை பல்கலைகழக மாணவர்கள் நால்வரும்  ஒரு மாணவியும் மது அருந்திய நிலையில் இருந்துள்ள அதேவேளை குறித்த மாணவியை மாணவர்கள் மூவரும் நிர்வாணமாக படம் பிடித்துள்ளனர்.
தகவல் அறிந்து பிரதேசத்தில் குவிந்த சுமார் இருநூறுக்கும் அதிமான பிரதேசவாசிகள் மாணவர்களை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


போலீசார் ஸ்தலத்துக்கு வரும் போது மாணவர்கள் கடுமையான போதையில் இருந்தாக தெரிவிக்கப்படும் அதேவேளை சம்பவத்தில் தொடர்புடைய மாணவி கண்டி கட்டுகஸ்தோட்டை  பிரதேசத்தையும் மாணவர்கள் மீகலேவ, அரநாயக்க, போரல்லஸ்கமுவ பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.kandy

No comments:

Post a Comment