Tuesday, July 28, 2015

கர்பிணி மனைவியை பார்க வந்த தாதியோடு அறையில் உல்லாசமாக இருந்த கணவர் !

கர்ப்பிணிப் பெண்ணைக் கண்கானிப்பதற்கா செல்லும் குடும்பநலமாதுவான இளம் யுவதியுடன் தனது வீட்டில் அந்தரங்கமாக இருந்த இளம் குடும்பஸ்தரால் வலிகாமம் பகுதியி்ல் உள்ள கிராமம் ஒன்றில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பகுதிக்கு பொறுப்பான குடும்பநல மாதுவான இளம் யுவதி குறித்த பகுதியைச் சேர்ந்த இளம் கர்ப்பிணிப் பெண்ணை பார்வையிடுவதற்காக அடிக்கடி சென்றுள்ளார். குறித்த இளம் பெண்ணின் தொலைபேசி இலக்கத்தை அந்த கர்ப்பிணிப் பெண் வாங்கி வைத்திருந்ததை அறிந்த கணவன் அந்த தொலைபேசி இலக்கத்தை எடுத்து குறித்த இளம் குடும்ப மாதுவுடன் அடிக்கடி கதைத்து வந்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந் நிலையில் குறித்த குடும்பஸ்தரின் மனைவி மகப்பேற்றுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது மனைவியின் தாயாரும் மகளுடன் அங்கே நின்றுள்ளார். இச் சந்தர்ப்பத்தில் குறித்த குடும்பத்தஸ்தர் குடும்பநலமாதுவை தனது வீட்டில் கொண்டு வந்து காமலீலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் வைத்தியசாலையில் இருந்து திடீரென மாமியார் தனது இன்னொரு மகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கி உள்ளே போனபோது அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அளித்துள்ளது.
இருவரும் நிர்வாண நிலையில் இருந்ததைக் கண்ட மாமியார் பெரும்சத்தம் இட்டு கத்திய போது அயலவர்கள் அங்கு திரண்டனர். அதன் பின்னர் குடும்பநலமாது அழுது புலம் கெஞ்சியதால் அயலவர்கள் பரிதாபப்பட்டு குறித்த இளம்பெண்ணை ஆடைகளை அணியவிட்டு அனுப்பியுள்ளனர். தற்போது குழந்தை பெற்றுள்ள குடும்பப் பெண் கணவருடன் தங்காது தனது இன்னொரு சகோதரியின் வீட்டில் தங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment