Saturday, June 27, 2015

கண்ணை திறந்து மூடும் உலகின் அதிசய மம்மி (வீடியோ)

இத்தாலியின் தென் பகுதியில் உள்ள சிசிலியின் பல்மெர்கோ நகரில் அமைந்துள்ள அருங்காட்சியத்தில், 90 வருடங்களுக்கு முன்னர் நிமோனிய காய்ச்சலால் இறந்துபோன 2 வயது சிறுமி ரோசாலியா லம்போட்டாவின் உடல் பதப்படுத்தபட்டு கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டுள்ளது. உலகின் மிக அழகான மம்மியாக இது கூறபடுகிறது. இதை பார்ப்பதற்கு என்றே சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

உண்மையில் இதை இறந்த உடல் மம்மியாக ஏற்று கொள்ள முடிய வில்லை ஏனென்றால் ஒரு சிறுமி கண்ணாடி பேழைக்குள் உறங்குவது போன்று அழகிய தோற்றத்துடன் உள்ளது. பலர் இதை உறங்கும் அழகி என்றே அழைக்கின்றனர். இந்த சிறுமி மம்மியின் கண்கள் அடிக்கடி திறந்து மூடுகிறது. ஆழமான தூக்கத்தில் இருந்து ஒருவர் கண்ணை திறப்பது போல் மெதுவாக கண்கள் திறப்பது போல் அது உள்ளது. இதுகுறித்து ஆவணப்படம் ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment