யாழ்.கொடிகாம பொலிசார் மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் எனும் சந்தேகத்தில் 12 பெண்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அது தொடர்பில் தெரியவருவதாவது,
கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியும் விற்பனையும் இடம்பெற்று வருவதாக தமக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கொடிகாம் பொலிசார் தெரிவிக்கின்றனர். அந்த தகவலின் பிரகாரம் அப்பகுதிக்கு சென்ற தாம் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஒருவரை கைது செய்ததாகவும், கைது செய்த நபரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளை திடீர் என பெண்கள் கூட்டம் ஒன்று கூடி கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல விடாது தடுத்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அவ்வேளை திடீர் என தம்மீது (பொலிஸ் ) தாக்குதல் மேற்கொண்டதுடன் கல் வீச்சு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது பொலிசார் தெரிவித்துள்ளனர். அத் தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பொலிசார் காயமடைந்தனர். காயமடைந்த இரு பொலிசாரும் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பொலிசார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட தொடங்க பொலிசாரால் மேலதிக பொலிசார் வரவழைக்கப்பட்டு தாக்குதல் மேற்கொண்டார்கள் எனும் சந்தேகத்தில் கசிப்பு உற்பத்தி செய்தார் எனும் நபர் உட்பட 17 பேரை கைது செய்தனர். அதில் 12 பேர் பெண்கள் ஆவார்கள்.
கைது செய்யப்பட்ட அனைவரும் கடந்த வெள்ளிக்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் பொலிசாரால் முற்படுத்தப்பட்டனர். அவர்கள அனைவரையும் எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதிபதி செல்லையா கணபதிப்பிள்ளை உத்தரவு இட்டுள்ளார்.
அது தொடர்பில் தெரியவருவதாவது,
கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியும் விற்பனையும் இடம்பெற்று வருவதாக தமக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கொடிகாம் பொலிசார் தெரிவிக்கின்றனர். அந்த தகவலின் பிரகாரம் அப்பகுதிக்கு சென்ற தாம் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஒருவரை கைது செய்ததாகவும், கைது செய்த நபரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளை திடீர் என பெண்கள் கூட்டம் ஒன்று கூடி கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல விடாது தடுத்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அவ்வேளை திடீர் என தம்மீது (பொலிஸ் ) தாக்குதல் மேற்கொண்டதுடன் கல் வீச்சு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது பொலிசார் தெரிவித்துள்ளனர். அத் தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பொலிசார் காயமடைந்தனர். காயமடைந்த இரு பொலிசாரும் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பொலிசார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட தொடங்க பொலிசாரால் மேலதிக பொலிசார் வரவழைக்கப்பட்டு தாக்குதல் மேற்கொண்டார்கள் எனும் சந்தேகத்தில் கசிப்பு உற்பத்தி செய்தார் எனும் நபர் உட்பட 17 பேரை கைது செய்தனர். அதில் 12 பேர் பெண்கள் ஆவார்கள்.
கைது செய்யப்பட்ட அனைவரும் கடந்த வெள்ளிக்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் பொலிசாரால் முற்படுத்தப்பட்டனர். அவர்கள அனைவரையும் எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதிபதி செல்லையா கணபதிப்பிள்ளை உத்தரவு இட்டுள்ளார்.
No comments:
Post a Comment