Wednesday, April 22, 2015

கல்வி கற்க வந்த மாணவியை சீரழித்த ஆசிரியரான அரசியல்வாதி இவர் தான் !

காத்தான்குடி நகர சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் எச்.எம்.எம். பாக்கீர் ஒரு பாலியல் குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவரால் நடத்தப்பட்ட தனியார் கல்விநிலையத்திற்கு கல்வி கற்க சென்ற 19 வயதான மாணவியொருவரை காரில் கடத்திச் சென்று சீரழித்தது அம்பலத்திற்கு வந்து, கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்ட நபர் தொடர்பில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டபோதே, பாலியல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
2013ம் ஆண்டு ஏப்ரல் 22ம் திகதியன்று 19 வயதான மாணவியொருவரை தனது காரில் கடத்திச் சென்று பாலியல் தொல்லைக்குட்படுத்தியதாக காத்தான்குடி பொலிஸாரால் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் (21.04.2015) குறித்த நகர சபை உறுப்பினரைக் குற்றவாளி எனத் தெரிவித்துள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பறிக்கை எதிரிக்கூட்டில் நகரசபை உறுப்பினர் பிரசன்னமாகி இருந்த நிலையில் நீதிமன்றின் முதலியாரால் 25 நிமிடங்கள் வாசிக்கப்பட்டன. இத்தீர்ப்பறிக்கையில் முறைப்பாட்டாளரான பாதிக்கப்பட்ட மாணவியின் சாட்சியம், இச்சம்பவத்தை விசாரித்த பொலிஸ் அதிகாரியின் சாட்சியம், சட்ட வைத்திய அதிகாரியின் சாட்சியம், எதிரியால் அளிக்கப்பட்ட வாக்குமூலம் என்பன உள்ளடக்கப்பட்டிருந்ததோடு இவ்வாறான மேலும் சில வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புக்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.
பாதிக்கப்பட்ட மாணவியினால் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட வாக்கு மூலம், நீதிமன்றில் அளிக்கப்பட்ட சாட்சியம், இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்திய பொலிஸ் அதிகாரியின் சாட்சியம், சட்ட வைத்திய அதிகாரியின் சாட்சியம் என்பன ஒன்றுக்கொன்று முரணற்ற வகையில் அமைந்திருப்பதால் எதிரியின் குற்றச்செயலானது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் தீர்ப்பறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வழக்கு விசாரணையின்போது நகரசபை உறுப்பினரின் வாக்கு மூலத்தில்“ தான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு நகர சபை உறுப்பினர். தனியான கல்வி நிலையமொன்றை நீண்ட காலமாக நடாத்தி வருவதோடு சுமார் 1500 மாணவ மாணவிகள் தற்போதும் தன்னிடம் கல்வி கற்று வருகின்றனர். இதுவரை இவ்வாறானதொரு குற்றச்சாட்டு தன்மீது சுமத்தப்படவில்லை. இக்குற்றச்சாட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் திட்டமிட்டு சுமத்தப்பட்டது” என தெரிவித்திருந்தார்.
இவரது பிரத்தியேகக் கல்வி நிலையத்திற்கு கல்வி கற்க வந்த முறைப்பாட்டாளரான 19 வயதுடைய ஓட்டமாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்த இம்மாணவியை இவர் தனது காரில் கல்முனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மாணவியை பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தியதாகவும், நகரசபை உறுப்பினரின் தொல்லைகளைத் தாங்க முடியாத மாணவி கல்முனையிலிருந்து காத்தான்குடிக்குத் திரும்பி வரும் வழியில் கிரான்குளம் எனுமிடத்தில் காரின் கதவைத் திறந்து கொண்டு வீதியில் குதித்து தப்பித்ததாகவும் இதன்போது அவ்வழியே வந்த பொதுமக்கள் இம்மாணவியைக் காப்பாற்றி காத்தான்குடிக்கு கொண்டு வந்து சேர்த்ததாகவும் காத்தான்குடிப் பொலிசாரால் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
சம்பவம் நடைபெற்று சரியாக இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/2988.html

No comments:

Post a Comment