பிறப்பு : 9 டிசெம்பர் 1957 — இறப்பு : 27 ஏப்ரல் 2015
பூநகரான் என்னும் புனைபெயரில் அரசியல் கட்டுரைகளை எழுதி வந்த குகதாசன் பொன்னம்பலம் அவர்கள் கனடாவில் மாரடைப்பால் காலமானார்.
கிளிநொச்சி பூநகரி சித்தங்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் குகதாசன் அவர்கள் 27-04-2015 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(இளைப்பாறிய வைத்திய கலாநிதி) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, சிந்தாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், தனலட்சுமி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும், அபிராமி, தர்மினி ஆகியோரின் அன்புத் தந்தையும், சண்முகரத்தினம்(இளைப்பாறிய வைத்திய கலாநிதி- யாழ்ப்பாணம்), சிறிகந்தராசா(முன்னாள் உப அதிபர் இந்துக்கல்லூரி- யாழ்ப்பாணம்), கதிரநாயகி(வவுனியா), காந்தராணி(கொக்குவில்), காலஞ்சென்ற முருகதாசு(நோர்வே), முருகவேள்(முன்னாள் அதிபர் றுக்வூட் தமிழ் வித்தியாலயம் நுவரெலியா, வள்ளுவன் பாடசாலை- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சீதாலட்சுமி(கோண்டாவில்), சண்முகலிங்கம்(கோண்டாவில்), காலஞ்சென்ற சங்கரலிங்கம், மகேசுவரி(உரும்பிராய்), பஞ்சலிங்கம்(இணுவில்), இரத்தினலிங்கம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
பொன்னம்பலம் முருகவேள்(சகோதரர்) |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||||||||||||||||||||||
|
பூநகரான் கனடாவில் மாரடைப்பால் மரணம்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 11:59.02 AM GMT ]
58 வயது நிரம்பிய பூநகரான் கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
இரு பிள்ளைகளுக்கு தந்தையான இவர் மாரடைப்பில் காலமானார்.
58
http://www.tamilwin.com/show-RUmtyERcSUjx1H.html
No comments:
Post a Comment