Thursday, April 16, 2015

லண்டனில் ஈழத் தமிழர்களின் காலை வாரும் கிழக்கு ஐரோப்பிய வெள்ளையர்கள் !

தமிழர் பகுதியில் இராணுவம் ஏன் புதுவருட நிகழ்ச்சிகளை ஏற்பாடுசெய்கின்றது ?

[ Apr 15, 2015 02:01:07 PM | வாசித்தோர் : 6815 ]

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமிழர் பகுதிகளில் இராணுவத்தினர் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துநடத்திவருகின்றமை குறித்து சமூக ஊடக வலையமைப்பான டுவிட்டரில் சமூக ஆர்வலர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
சுதந்திர ஊடக இயக்கத்தின் முன்னாள் ஏற்பாட்டாளரான சுனந்த தேசப்பிரிய ' தமிழர் பகுதியில் இராணுவம் ஏன் புதுவருட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றது? அங்கு சிவில் அதிகாரிகள் இல்லையா? என தனது டுவிட்டர் கணக்கில் புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்துள்ளார். அதனைப் பலரும் பகிர்ந்துகொண்டுள்ள நிலையில் சுனந்தவின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஒருவர் ' தமிழர்கள் மிகவும் நாகரீகமற்றவர்கள் தமது சொந்த விழாவையே நடத்த தெரியாதவர்கள் அதனால் தான்' (இராணுவம் ஏற்பாடுசெய்துநடத்துகின்றது) என்ற பொருள்பட பதிலளித்துள்ளார்.
இன்னுமொருவரோ ' விடுதலைப்புலிகளிடமிருந்து தமிழர்களைக் காப்பாற்றியது இலங்கை இராணுவம் என்பதே உண்மையாகும். அதனால் தான் அவர்கள் அக்கறைகொண்டுள்ளனர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப்பதிலளிக்கும் வகையில் கருத்துவெளியிட்டுள்ள ஒருவரோ ' அப்படியென்றால் நாம் ஏன் இராணுவத்தினர் நாடுபூராகவும் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்ககூடாது? இராணுவத்தினருக்கு என ஆணையொன்றுள்ளது. அது இதுவல்ல' எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.


லண்டனில் ஈழத் தமிழர்களின் காலை வாரும் கிழக்கு ஐரோப்பிய வெள்ளையர்கள் !

[ Apr 16, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 4810 ]
லண்டனில் வீட்டு உரிமையாளர்கள் தற்போது போறாத காலத்தில் சிக்கி தவிக்கிறார்கள். இதில் (தமிழ்) வீட்டு உரிமையாளர்களுக்கு சனி உச்சக்கட்டத்தில் உள்ளதுபோல இருக்கே. ஐரோப்பிய நாடுகளில் இருந்து லண்டன் வரும் பலர் தமிழர்களிடம் வீட்டை வாடகைக்குப் பெற்று , பின்னர் ஆப்படித்து வருகிறார்கள். நடக்கும் உண்மைச் சம்பவங்களின் தொகுப்பை இங்கே தருகிறோம்.
பொதுவாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து லண்டன் வரும் வெள்ளை இனத்தவர்கள் , லண்டன் வந்த உடனே தம்மை சுய தொழில்(Self Employed) புரிபவர்களாக பதிவு செய்து விடுகிறார்கள். ஏதவது கட்டட வேலை செய்பவர்கள் போல இவர்கள் போலியாக நடிக்கிறார்கள்.
இவர்களின் முழு நோக்கம் என்னவென்றால் , லண்டனில் ஒரு கவுன்சில் வீட்டை பெற்றுவிடுவது தான். இவர்கள் மிளகாய் அரைக்கஏதுவாக இருப்பது தமிழர்களது தலைதான். இவர்கள் வாடகைக்கு வீடு ஒன்றை முதலில் தேடிக்கொள்கிறார்கள். அதிலும் தமிழர் அல்லது இந்தியர்களது வீடு கிடைத்தால் இவர்களுக்கு லாட்டரி அடித்ததுபோல தான். முதல் 6 மாதம் முடிந்த பின்னர் , ஏஜன்டு ஊடாக ஏன் வாடகைக்கு விடவேண்டும். அவர்களுக்கு கமிஷன் காசு போகிறதே. நாமே தனியாக வீட்டு ஒப்பந்தத்தை போடலாமே என்று ஆசை காட்டி தனி ஒப்பந்தத்தைப் போடுகிறார்கள். பின்னர் வாடகை காசை தரமறுப்பார்கள். இதனால் வீட்டின் உரிமையாளர் நீதிமன்றத்தை நாடி , பின்னர் இறுதியாக பெயில்-லீப் என்னும் குண்டர்களை நீதிமன்றம் அனுப்பி அவர்களை காலிசெய்ய வைக்கிறது.
இந்த பெயில்-லீப் அனுப்பும் கடிதத்தை கொண்டுபோய் கவுன்சிலில் காட்டினால் , கவுன்சில் உடனே வீட்டைக் கொடுக்கிறது. இந்த கவுன்சில் வீட்டை எடுக்கவே இவ்வளவு நாடகமும் நடக்கிறது. அதுவும் கர்பிணியாக இருந்தால் , இல்லையென்றால் சிறுவர்களோடு இருக்கும் பெற்றோருக்கு , கவுன்சில் வீடு கொடுப்பதில் முன்னுரிமை காட்டி வருகிறது. இதனை இந்த ஐரோப்பியர்கள் பயன்படுத்த தவறுவதே இல்லை. தமிழர்கள் தமது வீட்டை வாடகைக்கு கொடுக்க முன்னர் கவனிக்கவேண்டிய விடையங்கள் இதோ..
1. குறைந்தது 3 மாத வாடகை டிப்பொசிட்டாக வெண்டும் என்று கண்டீஷன் போடுவது.
2. வேலை இடத்தை சோதனை செய்து பார்பது.
3. தாம் சுய தொழில் புரிவதாக கூறினார் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.
4. ஐரோப்பியர்களுக்கு வீடு கொடுப்பதே மிகவும் கவனம் தேவை
5. வாடகைக்கு வரும் நபர்கள் , கர்பமாக இருக்கிறார்களா என்று அவதானித்தல் நல்லது.
மேற்கண்ட விடையங்களில் 2 விடையம் ஒத்துப்போனால் கூட உங்களுக்கு பிற்காலத்தில் ஆபத்து தான் என்பதனை மறக்கவேண்டாம். 

No comments:

Post a Comment