Saturday, April 25, 2015

உடலில் தோன்றிய மின்சாரம்: அமானுஷ்ய சக்தியுடன் வாழ்ந்த வினோதப் பெண்!


இங்கிலாந்தை சேர்ந்த ஜாக்குலின் என்ற பெண்மணிக்கு உடலில் ஒரு அமானுஷ்ய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் மான்செஸ்டரில் வசித்து வந்த ஜாக்குலின் என்ற பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் ஒரு நாள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபமடைந்த ஜாக்குலின், அவரது கணவரிடம் “உங்கள் கழுத்து உடைந்தால் என்ன?” என்று கத்தியுள்ளார்.
இதையடுத்து தான் ஜாக்குலின் வாழ்வில் பல அமானுஷ்ய விடயங்கள் தொடர் கதையாகியுள்ளன.
இந்த சண்டையை அடுத்து கோபத்தில், வீட்டைவிட்டு வெளியேறி ஸ்கூட்டரில் சென்ற ஜாக்குலினின் கணவர் ரான் விபத்தில் சிக்கி கழுத்து மற்றும் தண்டுவடம் பகுதியில் பலத்த காயமடைந்துள்ளார்.
இதையடுத்து ஒரு மாத காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தன்னால் தான் தன் கணவர் பரிதாபமாக உயிரிழந்ததாக கருதிய ஜாக்குலின் குற்றவுணர்ச்சியுடனேயே தன் வாழ்க்கையை வாழ தொடங்கியுள்ளார்.
கணவரை இழந்த சோகத்தில் இருந்த ஜாக்குலினின் வீட்டில், எலக்ட்ரிக் பல்புகள் தானாக வெடிக்க தொடங்கின. மேலும், அவர் வீட்டில் இருந்த வேக்கம் க்ளீனர் தானாகவே செயல்பட தொடங்கியுள்ளது.
இது மட்டுமல்லாமல் வீட்டில் இருந்த அனைத்து மின் சாதனங்களும் தானாகவே இயங்க தொடங்கியதால் ஜாக்குலின் செய்வதறியாது திகைத்துள்ளார்.
பின்னர் இவற்றை சரி செய்ய நபர் ஒருவரை வரவழைத்தார். ஆனால் அந்த நபராலும் இதற்கான சரியான காரணங்களை கண்டறிய முடியாததால், இறந்து போன தனது கணவர் தான் வீட்டில் ஆவியாக உலவுவதாக ஜாக்குலின் நம்ப தொடங்கியுள்ளார்.
தொலைக்காட்சி முதல் ரேடியோக்கள் வரை இவர் எதனையுமே தொடாமல் தானாக இயங்க தொடங்கியதால் அச்சத்தில் உறைந்த அவர், எலக்டீரிசியன் ஒருவரை 2வதாக மணமுடித்தார்.
ஆனாலும், இந்த அமானுஷ்ய பிரச்சனைகள் முடிவடையவில்லை. இவரின் இந்த வினோத பிரச்சனையால் ஜாக்குலினை பல சூப்பர் மார்க்கெட் போன்ற கடைகளில் நுழைய தடை விதித்துள்ளனர்.
இந்த நிகழ்வுகளால் மிகவும் மனமுடைந்த அவர் மன அழுத்தத்துக்கு உள்ளானதோடு, தீராத தலைவலிகளையும் பெற்று அவதியுற்றார். மேலும் அவர் பலமுறை தற்கொலை முயற்சிகளிலும் இறங்கியுள்ளார்.
பல புலனாய்வாளர்களும் நடத்திய விசாரணையில் கூட ஜாக்குலினுக்கு ஏன் இவ்வாறு நடக்கிறது என்பதனை கண்டறிய முடியவில்லை.
ஒருமுறை, பத்திரிகையாளர் ஒருவர் ஜாக்குலினை சந்தித்தபோது, ஜாக்குலின் ஒரு மோசடி பேர்வழி என்று குற்றம் சாட்டி பேசியுள்ளார்.
இந்த சொற்கள் ஜாக்குலினுக்கு கடும் கோபத்தினை ஏற்படுத்தியது. அந்த கோபத்தின் விளைவாக அருகில் இருந்த வேக்கம் க்ளீனர் வேகமாக செயல்பட தொடங்கியதுடன் சில விநாடிகளில் வெடித்து சுக்கு நூறாகியுள்ளது.
இவ்வாறு சென்று கொண்டிருந்த ஜாக்குலின் வாழ்வில், பேராசிரியர் ஒருவர் மூலமும் அவரது 2வது கணவர் மூலமும் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
அதாவது அந்த பேராசிரியரும், 2வது கணவரும், ஜாக்குலின் உடலில் சாதாரண மனிதருக்கு இருக்க வேண்டிய நிலை மின்சாரத்தின் அளவு 10 மடங்கு அதிக அளவில் இருப்பதால் தான், மற்ற மின் சாதனங்கள் இவரது இருப்பினால் இயங்க தொடங்கியுள்ளது என்ற முடிவுக்கு வந்தனர்.
இதையடுத்து, அவரது உணவு பழக்கத்தை மாற்றியதோடு, உடலில் உள்ள உபரி மின்சாரத்தினை வெளியேற்ற அவரது கைகளில் வெங்காயத்தினை வைத்து கொண்டு வீடுகளில் நடைபயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த வழிமுறைகளால் காலப்போக்கில் அவரது பிரச்சனைகள் படிப்படியாக குறைந்துள்ளன.
ஆனால் 1985ல் ஜாக்குலினுக்கு பிறந்த 4வது பெண் குழந்தை, பிறந்த சில காலத்திலேயே அதே பிரச்சனையை எதிர் கொள்ள தொடங்கியுள்ளது.
ஜாக்குலினுக்கு ஏற்பட்ட இந்த வினோத பிரச்சனைகள் ஏன் அவரது முதல் கணவர் இறந்ததும் தொடங்கியது?
ஹை வோல்டேஜ் சிண்ட்ரோம் எனப்படும் உயர் மின்னழுத்த நோய்க்குறியால் ஜாக்குலின் பாதிக்கப்பட்டாரா ? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளுக்கான விடைகள் மர்மமாகவே உள்ளது!

No comments:

Post a Comment