Tuesday, April 28, 2015

13 கோடி ரூபாயுடன் இலங்கை வந்த நடாலி, நாதியா.

‘செவ்வய்வர்’ எனப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியீட்டியவரான இலங்கையை பூர்வீகமாக க் கொண்ட நடாலி எண்டர்சன் தனது தாய்நாட்டுக்கு திரும்பியுள்ளார்.

குறித்த நிகழ்ச்சியில் வெற்றியீட்டிய அவருக்கு கிடைத்த பணப் பரிசுத் தொகை 13 கோடி ரூபா (இலங்கை ரூபா) நடாலி எண்டர்சனுடன் அவரது இரட்டைச் சகோதரியான நாதியா எண்டர்சனும் இலங்கைக்கு வந்துள்ளார்.
அவரும் குறித்த நிகழ்ச்சியில் பங்குபற்றியிருந்த போதும் முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவி வெளியேறியிருந்தார்.
தான் வெற்றி பெற்ற பணத்தில் ஒரு தொகையை இலங்கையில் உள்ள வறிய குழந்தைகளுக்கு செலவிடவுள்ளதாக நடாலி தெரிவிக்கின்றார்.
நடாலி மற்றும் நாதியா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிறந்தவர்கள். பின்னர் 3 வயதாக இருக்கும்போது இலங்கைக்கு வந்துள்ளனர்.


அதன் பின்னர் 10 வயதில் மீண்டும் பெற்றோருடன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். கடந்த 3 வருடங்களுக்கு முன்னரும் இவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.Nadale 01Nadale 02Nadale 03Nadale 04Nadale 05Nadale 06Nadale

No comments:

Post a Comment