இச்சம்பவம் டன்டாஸ் வீதி மற்றும் டிக்சி வீதிக்கு அருகில் குயின் விரெடெறிக்கா டிரைவ்வில் அமைந்துள்ள அடுக்குவீடுகள் வளாகத்தில் நடந்தது. இரவு 10.40மணியளவில் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஒருவகை கைகலப்பின் போது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் இரு அதிகாரிகள் தீவிரமான காயங்களிற்கு உள்ளாகியதாகவும் கான்ஸ்டபிள் ஜோர்ஜ் ருடொஸ் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
இரு அதிகாரிகளும் கத்திக்குத்து காயங்களால் பாதிக்கப்பட்டதாக பீல் பிராந்திய பொலிஸ் சங்கம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. அதிகாரிகளில் ஒருவர் கூட சுடப்பட்டதாகவும் ஆனால் அவர் துப்பாக்கி துளைக்காத கவசம் அணிந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் சம்பவ இடத்திற்கு பொலிசார் அழைக்கப்பட்டதற்கான காரணம்  தெரிவிக்கவிக்க படவில்லை. எத்தகைய சம்பவம் அல்லது எத்தகைய அழைப்பு சம்பந்தப்பட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை.
காயமடைந்த இரு பொலிஸ் அதிகாரிகள் தவிர்ந்த 30-வயதுடைய குடிமகன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் வேறொருவர் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளார்.
சிறப்பு விசாரனைகள் பிரிவினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர். சம்பவம் ஒன்றில் பொலிசாரின் முன்னிலையில் குடிமகன் ஒருவர் தீவிர காயங்களிற்கு உட்பட்டால் அல்லது மரணமடைந்தால் SIU அழைக்கப்படுவது வழக்கம்.
சம்பவ இடத்தில் பெருமளவிலான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுமார் 80-பொலிஸ் கார்கள் வரை காணப்பட்டுள்ளன.
missmiss2miss3miss5miss6miss8miss9miss10
miss11