Wednesday, March 18, 2015

பார்ட்டிலாம் பழக்கமே இல்லையாம்… உலகமகா நடிப்புடா சாமி..!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6qggC9C5Q_bysIvS7hkrkuE3xV98nZtDkdNTxGNkJ1WV5G1Q6WKH_NbzUoHY0FySSnnuYLQl9o7mKPxIYxTApIrJbMVjuij5n47ISjiqdJ-LS6dv3twPzaCGbJqeR-KiDolWNB3aa4Yo/s1600/Anjali+HD+Hot+Images+Wallpapers+Photos+Photoshoot+Pictures+Poster+Saree+Cute+Gallery+22.jpg


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலர்ந்து வரும் நேரம் பார்த்து தன் சித்தியுடன் சண்டை போட்டு பல சர்ச்சைகளில் சிக்கி காணாமல் போனார் அஞ்சலி.அதற்கு பிறகு அஞ்சலி எங்கு இருக்கிறார், என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் அப்போ அப்போ அவரைப் பற்றிய செய்திகள் மட்டும் வந்து எட்டி பார்க்கும்.
ஒருநாள் திடீரென்று திரும்பி வந்த அவர் ஒரு சில தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வந்தார். அதன் பிறகு தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக சுராஜ் இயக்கும் அப்பாடக்கர் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்னொரு ஹீரோயினாக த்ரிஷாவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் நடிகை அஞ்சலி தனக்கு பார்ட்டிக்கெல்லாம் செல்லும் பழக்கமில்லை என்று கூறியுள்ளார். அப்போ சித்தி பிரச்சினையில் சிக்கியப்போது, ஐதராபாத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டியில் விடிய விடிய குடித்துவிட்டு குத்தாட்டம் போட்டது யாராக இருக்கும்.
ஏன் சமீபத்தில் கூட ஒரு பார்ட்டியில் கலந்துக்கொண்ட அஞ்சலி குடித்து விட்டு கலாட்டா செய்தார் என்றெல்லாம் பரபரப்பாக செய்திகள் வந்தன. ஆனால், தனக்கு பார்ட்டிக்கெல்லாம் செல்லும் பழக்கமில்லை. அப்படி பார்ட்டிக்குச் செல்லும் அளவிற்கு நேரம் கிடைத்தால் வீட்டில் உட்கார்ந்து படங்களைப் பார்த்து ரசிப்பேன் என்று கூறியிருக்கிறார்.பொய் சொல்வதற்கும் ஒரு அளவு இருக்கிறது. ஆனால் கையும் களவுமாக சிக்கிய பிறகும் கூட இப்படி அண்ட புழுகு புழுகுறீங்களே அஞ்சலி..

No comments:

Post a Comment