Wednesday, March 25, 2015

வில்வித்தையில் அசத்தும் 3 வயது சிறுமி: தேசிய அளவில் சாதனை

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 3 வயது சிறுமி டாலி ஷிவானி வில்வித்தை போட்டியில் கலந்து கொண்டு தேசிய சாதனை படைத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வில்வித்தை அகாடமி நடத்தி வரும் செருகுரி சத்யநாராயணா என்பரின் மகளான டாலி ஷிவானி, 5 மீற்றர் மற்றும் 7 மீற்றர் தொலைவு வில்வித்தையில் 200 புள்ளிகள் எடுத்து தேசிய சாதனை படைத்துள்ளார்.
இவரது இந்த சாதனை லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.
இந்த அரிய சாதனையை நேரில் பார்த்த லிம்கா புத்தகத்தின் விஸ்வாரூப்சவுத்ரி கூறுகையில், இது யாராலும் எளிதில் முறியடிக்க முடியாத மிகப்பெரும் சாதனை என்று கூறியுள்ளார்.
கடந்த 2004ஆம் ஆண்டு ஷிவானியின், மூத்த சகோதரி ஒரு விபத்தில் பலியானார். கடந்த 2010ஆம் ஆண்டு சர்வதேச வில்வித்தை பயிற்சியாளரான ஷிவானியின் சகோதரரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இதற்கு பின்தான் டாலி ஷிவானி ஒரு வாடகைத்தாய் மூலம் பிறந்தார்.

No comments:

Post a Comment