Friday, February 6, 2015

பிரான்சில் இருந்து தப்பிய ஜிகாட் பெண்: தற்போது ISIS இயக்கத்தில் இருக்கிறார் !


மேலே உள்ள புகைப்படத்தை நீங்கள் பார்த்த உடனே, இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோம் என்று நினைப்பீர்கள். ஆம் இவர் வேறு யாரும் அல்ல பிரான்சில் நடைபெற்ற கொலைகளோடு சம்பந்தப்பட்ட நபர் தான். பிரான்ஸ் நாட்டில் நபிகள் நாயகத்தை கேலிசெய்த சஞ்சிகை மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 12 பேர் உயிரிழந்தார்கள். இத்தாக்குதலை நடத்திய ISIS தீவிரவாதிகளில் ஒருவரின் மனைவி தான் இந்தப் பெண். இவர் பிரான்ஸ் நாட்டில் தான் வசித்து வந்தார். இவரை பொலிசார் அடையாளம் கண்டுபிடித்து தேட ஆரம்பித்ததும் இவர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டார். எப்படி மறைந்தார் எங்கே சென்றார் என்று எவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.
அந்த அளவுக்கு ஐரோப்பிய பொலிசார் கண்ணில் மண்ணை தூவிய பெண் இவர். ஹையாட் என்னும் இந்தப் பெண் தற்போது ISIS தீவிரவாதிகள் புதிதாக வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தோன்றியுள்ளார். முகத்தை மறைத்து இவர் துணியால் கட்டியுள்ளபோதும் அமெரிக்கா புலனாய்வாளர்கள் விடவில்லை. படத்தை நுணுக்கமாக ஆராய்ந்து அவரது கண்களையும் புருவங்களையும் வைத்து இவர்தான் அந்தப் பெண் என்பதனை அடையாளம் கண்டு பிடித்துள்ளார்கள். ஐரோப்பாவில் இருந்த இவர் எப்படி தப்பித்து சிரியா சென்றார் ? அங்கிருந்து எல்லை கடந்து எப்படி ISIS தீவிரவாதிகளோடு மீண்டும் சென்று இணைந்தார் என்ற கேள்விகளுக்கு பதில் இன்னும் கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment