Monday, February 23, 2015

லண்டனில் பெனிவிட் பணத்தில் இலங்கை சென்ற பெண் தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது !

பிரித்தானியாவில் பல பெண்கள், தமது கணவனை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இது ஒரு பாஷனாக மாறிவிட்டது. இதனால் தாம் தனியாக இருப்பதாக கூறி அரசாங்கத்திடம் அவர்கள் பெருந்தொகையான பணத்தை கறக்கிறார்கள். பிள்ளையை பராமரிக்க தேவையான பணம், வீட்டிற்கான வாடகைப் பணம், என்று இந்த அம்மாமார்கள் 8,500 பவுண்டுகளை ஆண்டு ஒன்றிற்கு பெறுகிறார்கள். அதாவது 700 பவுண்டுகள் மாதம். இவ்வாறு குழந்தையை பராமரிக்க என அரசு தரும் பணத்தை எடுத்து உலக வலம் வந்துள்ளார் இந்த பிரித்தானியப் பெண்.
அவர் இலங்கை , டுபாய் , பார்லி என்று பல நாடுகளுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அவரே தனது புகைப்படத்தை இனரர் நெட்டில் வெளியிட்டு இறுதியாக மாட்டிக்கொண்டுள்ளார். தான் இருக்கும் வீட்டிற்கு வாடகை கட்டவேண்டும் என்று கூறி இவர் பணத்தை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுவந்துள்ளார். இருப்பினும் இவரது சித்தப்பாவே வாடகை பணத்தை கட்டி வந்துள்ளார் என்ற விடையமும் தற்போது தெரியவந்துள்ளது. எதனை எல்லாம் இன்ரர் நெட்டில் போடுவது என்ற விவஸ்தை இருக்கவேண்டும். இப்படி தாறு மாறாக எதனையாவது போட்டால் இப்படி தான் சிக்கலில் மாட்டவேண்டி இருக்கும்.

No comments:

Post a Comment