Tuesday, February 17, 2015

வடமாகாண சபை உறுப்பினர் கனகசுந்தர சுவாமி மரணம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தர சுவாமி (வயது-67) இன்று மாலை உயிரிழந்துள்ளார்.
இவர் புற்று நோயினால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
வவுனியா தனியார் வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கிராம சேவையாளராக கடமையாற்றி ஓய்வு பெற்ற பின்னார் கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இடம் பெற்ற வடமாகாண சபைக்கான முதலாவது தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின்; சார்பில் போட்டியிட்டு வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டார்.
கடந்த காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு பொது அமைப்புக்களின் ஊடாக பல்வேறு சமூக சேவைகளையும் மேற்கொண்டு மக்களின் நன்மதிப்பையும் கௌரவத்தையும் பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment