Monday, February 9, 2015

3 பெண்களோடு செக்ஸ் உறவுக்கு ஆசைப்பட்ட சிறைக் காவலாளி: 18 கைதிகளை தப்பவைத்த 3 பெண்கள் !


பிரேசில் நாட்டில் உள்ள சிறைச்சாலை ஒன்றில், காவலாளியை ஏமாற்றி 18 கைதிகளை தப்பவைத்துள்ளார்கள் 3 இளம்பெண்கள். குறித்த காவலாளி கடமையில் இருந்தவேளை அங்கே சென்ற 3 இளம் பெண்கள் , அவரோடு சல்லாபமாக இருப்பது போல நடித்துள்ளார்கள். இதனை உண்மை என்று நம்பிய காவலாளி அவர்கள் கொடுத்த மது பாணத்தையும் அருந்தியுள்ளார். அவ்வளவு தான். திடீர் மயக்கம் போட்ட அவரை , விலங்கால் பிணைத்து விட்டு அந்த 3 பெண்களும் அங்கிருந்த 18 கைதிகளை தப்பவைத்துள்ளார்கள்.
மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தால் நடந்த விபரீதத்தை புரிந்துள்ளார் காவலாளி. தான் அருந்திய மதுவில் போதைப் பொருள் கலக்கப்பட்டு இருந்துள்ளது என்ற விடையம் பின்னர் தான் அவருக்கே தெரியும். இதேவேளை பொலிசார் விரைந்து செயல்பட்டுள்ளார்கள். குறித்த சிறைச்சாலை பாலைவனம் ஒன்றில் உள்ளதால், கைதிகளால் அதிக தூரம் செல்ல முடியவில்லை. இதன் காரணமாக பொலிசார் பலரை மீண்டும் கைதுசெய்து சிறையில் அடைத்துவிட்டார்கள். இருப்பினும் அவர்களில் மிகவும் முக்கியமான நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த 18 பேர் முக்கியம் அல்ல. குறித்த அந்த ஒரு நபரை தான் சிறையில் இருந்து விடுவிக்க இந்த திட்டம் நடைபெற்றுள்ளது என்பது நன்றாகப் புரிகிறது.

No comments:

Post a Comment