Wednesday, January 28, 2015

சிறைச்சாலையில் ஆமி அதிகாரி போராட்டம்!

புதிய அரசை கவிழ்த்து விடுவதில் கோத்தாபாயவும் அவரது விசுவாசிகளும் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டவண்ணமேயிருக்கின்றனர். அவ்வகையில் யாழ்.சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படை அதிகாரியொருவர் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டமொன்றை நேற்று செவ்வாய்கிழமை நண்பகல் முதல் ஆரம்பித்திருக்கின்றார்.

மேஜர் பிரபாத் எனும் குறித்த படை அதிகாரி விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்ததாகக் கூறி கடந்து இருவருடங்களிற்கு முன்னதாக பலாலியில் வைத்து கைதாகியிருந்தார். தற்போது யாழ்.சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த அதிகாரி தன்மீதான குற்றச்சாட்டு பொய்யானதெனவும் பழிவாங்கும் வகையில் தான் கைது செய்யப்பட்டதாகவும் கூறி தன்னை விடுவிக்க கோரியே உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இரண்டாவது நாளாக தொடரும் அவரது போராட்டம் தொடர்பாக சிறைச்சாலை நிர்வாகம் தனது தலைமை அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.


எனினும் தற்போதைய அரசை தர்மசங்கட நிலைக்கு தள்ளி புலிச்சாயம் பூசவைக்கவும் இதனூடாக படையினரது ஆதரவை தம்பக்கம் இழுக்கவுமே கோத்தபாயவினால் இச்சதி திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தனது ஆதரவு படை அதிகாரிகளினூடாக சிறையிலுள்ள அதிகாரியினைத் தூண்டிவிட்டு இப்போராட்டத்தை ஆரம்பிக்க வைத்திருப்பதாக மற்றொரு தரப்பும் கூறுகின்றது.Jaffna Prison

No comments:

Post a Comment