Wednesday, January 28, 2015

சினிமா பட பாணியில் ஆளை கடத்தி காசுக்காக கைவிரலை வெட்டிய 12 ஆபிரிக்க நபர்கள் !


பிரித்தானியாவின் கொவன்ரி நகரில் டாமினி என்னும் நபரை கடத்தி 31 மணித்தியாலங்கள் பணயக் கைதியாக வைத்திருந்துள்ளார்கள் 12 ஆபிரிக்க நாட்டு இனத்தவர்கள். இவர்கள் டாமினியின் குடும்பத்தாரிடம் சுமார் 60,000 ஆயிரம் பவுன்ஸ் பணத்தை கோரியுள்ளார்கள். அவ்வளவு பணம் தம்மிடம் இல்லை என்று, குடும்பத்தார் கூறவே உடனே டாமினியின் கைவிரன் ஒன்றை வெட்டி அதனை குடும்பத்தாருக்கு அனுப்பி சினிமா பட பாணியில் மிரட்டியுள்ளார்கள். இச்சம்பவத்தை தொடர்ந்து சாதாரண பொலிசார் டீல் செய்த இந்த மேட்டர் ,ஸ்காட்லன் யாட் பொலிசாருக்கு கை மாறியது.
வெள்ளை வேன் ஒன்றில் டாமினியை கட்டி வைத்து , அதனை ஒரு இடத்தில் Park செய்து உள்ளார்கள் கடத்தல் காரர்கள். இதனிடையே 20,000 ஆயிரம் பவுன்ஸ் மட்டுமே தம்மால் திரட்ட முடிந்தது என்று கூறி, குடும்பத்தார் அந்த பணத்தை எடுத்துச் சென்று மறைவான ஒரு இடத்தில் கொடுத்துள்ளார்கள். வெள்ளை வேனில் இருந்த டாமியை வெளியே தள்ளிவிட்டு அவர்கள் சென்றுவிட்டார்கள். ஆனால் சும்மா விடுவார்களா ஸ்காட்லன் யாட் பொலிசார். எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டார்கள். இந்த 12 பேரும் ஒரே வீட்டில் தான் வசித்து வருகிறார்கள் என்பதனையும் அவதானித்து. அவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கும் வேளை பார்த்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று அலேக்காக 12 பேரையும் பிடித்துவிட்டார்கள்.
இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால். அந்த 20,000 ஆயிரம் பவுன்ஸ் காசும் அங்கே தான் இருந்துள்ளது. அதில் ஒரு பவுன்ஸை கூட அவர்கள் எடுத்து செலவு செய்யவில்லை. இவர்கள் அனைவருக்கும் சேர்த்து 152 வருட தண்டனையை நீதிபதி வழங்கி தீர்பளித்துள்ளார்.

No comments:

Post a Comment