Friday, December 26, 2014

ராணிக்கு நெத்தியடி கொடுத்த இளவரசி!

பிரித்தானிய ராணி எலிசபெத் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கேட்- வில்லியம்ஸ் தம்பதியினர் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது.
பிரித்தானிய ராணி எலிசபெத் அரச குடும்பத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாடத்தில் பங்கேற்பவர்கள் குறித்து பட்டியலிட்டுள்ளார்.
ஆனால் அந்த பட்டியலில் இளவரசி கேட் மிடில்டனின் பெற்றோர்களை அவர் சேர்க்கவில்லை. மேலும் அவர்களை வரவேற்று பத்திரிகையும் வைக்கவில்லை என தெரியவந்துள்ளது.
ராணியின் இச்செயல் கேட்டை சோகத்தில் ஆழ்த்தவே, அவர் ராஜ குடும்பத்தின் விருந்தில் பங்கேற்காமல் தன் கணவர் வில்லியம்சுடன் சேர்ந்து தனது தாய் வீட்டில் அளித்த விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் ராணி எலிசபெத் தன் பெற்றோர்களை கிறிஸ்துமசுக்கு அழைக்காமல் செய்ததற்கு, கேட்டின் இச்செயல் பதிலடி கொடுப்பதை போல் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment