Thursday, November 27, 2014

தீ வைத்து எரிக்கப்பட்ட அகதிகள் முகாம்: இரண்டு நபர்கள் கைது !


சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த முகாம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து வழக்கில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுவிஸின் ஜெனிவா மாகாணத்தில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த முகாமில் கடந்த நவம்பர் மாதம் 16ம் திகதி அன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 40 பேர் படுகாயம் அடைந்தனர், மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், தற்போது முகாமிற்கு தீ வைத்ததாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
189ம் நபர்கள் தங்கியிருந்த இந்த கட்டிடம் தீயில் ஏறிந்துவிட்டதால், அதில் வசித்தவர்கள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த கட்டிடம் டிசம்பர் மாதம் இறுதிக்குள் சீர் செய்து தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கட்டிடம் 1967ம் அண்டு கட்டப்பட்டது.
http://www.coolswiss.com/view.php?2b4AlX4b2YE0e042cmM0d22eBnB33d3LBBBe0d06Amce0eMak2c24XO4b3

No comments:

Post a Comment