Saturday, November 29, 2014

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு இந்தியாவில் பெருகி வரும் ஆதரவு!

குழந்தையுடன் ஐ.எஸ்.ஐ.எஸ்-யில் இணைந்த இந்திய வாலிபர்: டுவிட்டரில் வெளியான புகைப்படம்
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 08:29.56 AM GMT +05:30 ]
இங்கிலாந்தை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான அபு ருமாய்சாக் என்பவர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் தனது பிறந்து குழந்தையுடன் இணைந்துள்ளார்.
சித்தார்தா தார் என்ற அபு ருமாய்சாக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் தீவிரவாத நடவடிக்கையை ஊக்குவிப்பதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் டிசம்பரில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் விடுதலையான அபு ருமாய்சாக் அங்கியிருந்து தப்பி சிரியாவிற்கு சென்றுள்ளார்.
அங்கு ஐ.எஸ். படையில் இணைந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தீவிரவாத இயக்கத்தில் இணைந்த அபு ருமாய்சாக் தனது பிறந்த குழந்தை மற்றும் ஏ.கே. 47 துப்பாக்கியுடன் புகைப்படம் எடுத்து அதனை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
புகைப்படத்தை பதிவு செய்துள்ள அவர், இஸ்லாமியவாதிகள் ஒரு "புதிய தலைமுறை" என புகழ்ந்துரைத்துள்ளார்.
ருமாய்சாக் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் நான்கு இளம் குழந்தைகளுடன் பாரிஸ் செல்லும் பேருந்தில் சென்று இறுதியில் சிரியாவிற்கு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டனின் மோசமான பாதுகாப்பு அமைப்பு என்னை எளிதாக இஸ்லாமிக்கில் இணைய வழிவகை செய்தது என்று தெரிவித்துள்ளார்.
http://www.newindianews.com/view.php?23DA2cKMS42M4203lA3dKOT22y03e2A62bomN3

ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த இளைஞர் நாடு திரும்பினார் (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 09:18.24 AM GMT +05:30 ]
ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைந்திருந்த இந்திய இளைஞர் ஒருவர் நாடு திரும்பியுள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்திருந்த, மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் கல்யாணைச் சேர்ந்த 4 இளைஞர்களில் ஒருவரான ஆரிப் மஜீத் நேற்று இந்தியா திரும்பியுள்ளார்.
இவரை தேசியப் புலனாய்வு அமைப்பு(என்.ஐ.ஏ) தனது பாதுகாப்பில் எடுத்து விசாரித்து வருகிறது.
ஈராக்கிற்கு யாத்திரை சென்ற இளைஞர்கள் 4 பேர் ஐஎஸ் அமைப்பில் இணைந்து விட்டதாக ஒரு சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது, மேலும் நால்வரில் ஒருவர் போரில் கொல்லப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இருப்பினும் இச்செய்தி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், ஆரிப் என்பவர் இந்தியா திரும்பியுள்ளார்.
அந்த இளைஞர்களிடம், ஐ.எஸ் அமைப்பின் தீவிரவாத நடவடிக்கைகள் மற்றும் ஈராக்கில் அந்த தீவிரவாத அமைப்பினால் கடத்திச் செல்லப்பட்ட 40 இந்தியர்களின் நிலைமை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.
https://www.facebook.com/ponniyinselvan
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு இந்தியாவில் பெருகி வரும் ஆதரவு!
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 06:28.04 AM GMT +05:30 ]
இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் நடைபெற்ற காவல்துறை மாநாட்டில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு பேசியுள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், தீவிரவாதிகள் இந்தியாவை சீர்குலைக்க சதி செய்கின்றனர்.
இதனை செயல்படுத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. போன்ற அரசு அமைப்புகளே உறுதுணையாக இருக்கின்றன.
தீவிரவாதிகளை ஆதரிக்கவில்லை என பாகிஸ்தான் அரசு கூறுவதில் உண்மை இல்லை.
இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தாக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது கவலைக்குரியது.
உலகில் எத்தனையோ பயங்கரவாத அமைப்புகள் இயங்கலாம், ஆனால், அவை இந்தியாவில் கால் பதிக்க அரசு நிச்சயம் அனுமதிக்காது.
மேலும், இந்திய மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில் பொலிஸ், உளவுத் துறை அமைப்புகளின் பங்கு முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.
http://www.newindianews.com/view.php?23DA2cKMS42M4303lA3d4OT22S03e2A62bImN3
சிறுவர்களை அடித்து பயிற்சியளிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 12:28.30 பி.ப GMT ] [ ]
ஈராக்கில் சிறுவர்கள் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தப்படும் புதிய வீடியோவை, ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'த பிளட் ஒப் ஜிஹாத் 2' (The Blood of Jihad 2) என்ற தலைப்பில் வெளியான இந்த வீடியோ, ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டிலுள்ள நினெவெஹ் (Nineveh) மாகாணத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
இதில் சின்னஞ்சிறுவர்கள் வரிசையில் நின்று துப்பாக்கிச் சூட்டை நடத்துவது, சண்டைப் பயிற்சிகளில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இவர்களுக்கு பயிற்சியளிக்கும் தீவிரவாதி, சிறுவர்களை துன்புறுத்திவதும், அவர்களின் மர்ம உறுப்பில் அடிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறான்.
இந்த வீடியோவில் தோன்றும் சிறுவர்கள் 12 வயது அல்லது 13 வயதுக்கும் குறைவானவர்கள் என கூறப்படுகிறது.
http://newsonews.com/view.php?23BB2cAMA42M8202lA3dKOT22M03e2A62bTnB3

No comments:

Post a Comment