Friday, November 28, 2014

55 வயது பாட்டியின் மேல் காதல் கொண்ட 87 வயது தாத்தா: காதலுக்கு வயதில்லை!

தந்தையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த அன்பு மகன் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 03:41.24 மு.ப GMT ]
பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது தந்தையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளமை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பிரித்தானியாவை சேர்ந்த நாதன் (27) என்ற இளைஞர் தனது தந்தை ராபின்சனை (48) துண்டு துண்டாக வெட்டி உறுப்புகளை தொலைக்காட்சி ஸ்டாண்டாக உபயோகப்படுத்தியுள்ளார்.
இவர்கள் இருவரும் தங்கள் குடியிருப்பு கட்டடத்தில் ஒன்றாக தான் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்குமிடையில் நடந்த மோதலில் இவ்வாறு கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
முதலில் தனது தந்தையை கொலை செய்யவில்லை மறுத்து வந்தாலும், தற்போது ஒப்புக் கொண்டுள்ளதை அடுத்து இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

55 வயது பாட்டியின் மேல் காதல் கொண்ட 87 வயது தாத்தா: காதலுக்கு வயதில்லை
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 01:47.53 PM GMT +05:30 ]
காதலுக்கு வயதில்லை என்று நிரூபித்துள்ளனர் திருச்சியில் ஊனமுற்ற காதலர்கள்.
திருச்சி பாலக்கரையைச் சேர்ந்தவர் மூக்கையன்(87). பார்வையற்றவர். கடந்த 6 ஆண்டுகளாக திருச்சியில் ட்ரூ வேட்ஸ் என்ற தொண்டு நிறுவன பராமரிப்பில் உள்ளார்.
காரைக்காலை சேர்ந்தவர் ராணி (55). சரிவர கால் நடக்க முடியாதவர். 5 ஆண்டுக்கு முன் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுய நினைவின்றி இருந்த ராணியை ட்ரூ வேட்ஸ் நிறுவனத்தினர் மீட்டு பராமரித்து வந்தனர்.
இங்கு வந்த பின்னர் மூக்கையனும், ராணியும் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தனர். இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். தங்கள் காதலை தொண்டு நிறுவனத்தார் அங்கீகரிப்பார்களா, திருமணம் செய்து வைப்பார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
தொண்டு நிறுவனத்திலிருந்து திடீரென வெளியேறி, இருவரும் தஞ்சை பூண்டியில் உள்ள தேவாலயத்திற்கு சென்று பிச்சை எடுத்து வந்தனர். தொண்டு நிறுவன நிர்வாகிகள் இதையறிந்து, மீண்டும் அவர்களை மீட்டு வந்து, 2010ல் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
திருச்சி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் உலக முதியோர் தினவிழா திருச்சியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்று தங்கள் காதல் அனுபவங்களை இந்த தம்பதியர் பகிர்ந்து கொண்டனர்.
http://www.newindianews.com/view.php?23DA2cKMS42M4303lA3d4OT22I03e2A62b4mN3





No comments:

Post a Comment