Monday, November 24, 2014

அமெரிக்காவில் 12 வயதுச் சிறுவன் கைகளில் துப்பாக்கி ? பொலிசார் சுட்டதில் சிறுவன் பலி !

அமெரிக்காவில் கிலீவலான் மாநிலத்தில், பூங்காவில் விளையாடிக்கொண்டு இருந்த 12 வயதுச் சிறுவனைப் பொலிசார் சுட்டுள்ளார்கள். குறித்த சிறுவன் கைகளில் துப்பாக்கி ஒன்று இருப்பதாகவும் அதனை அவன் காட்டி பலரை மிரட்டுவதாகவும் வயதான தாத்தா ஒருவர் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கே விரைந்து வந்தபொலிசார், அச்சிறுவன் கைகளில் ஒரு துப்பாக்கி இருப்பதை கண்டுள்ளார்கள். துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு கைகளை மேலே உயர்த்தவேண்டும் என்று பொலிசார் கூறியுள்ளார்கள். ஆனால் அச்சிறுவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை அவ்வாறு அவன் செய்யவில்லை. சிலவேளை இது விளையாட்டாக இருக்கும் என்று கூட அவன் எண்ணி இருக்கலாம்.
ஆனால் பொலிசார் 2 முறை சுட்டுள்ளார்கள். ஒரு துப்பாக்கிக் குண்டு சிறுவனின் வயிற்றில் பாய்ந்துள்ளது. அவசரமாக சிறுவனை வைத்தியசாலையில் சேர்த்தார்கள். பல மணி நேரமாக உயிருக்குப்போராடிய ஆசிறுவன் இன்று அதிகாலை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் சற்றுமுன் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை சிறுவன் கைகளில் இருந்தது நிஜமான துப்பாக்கி இல்லை என்று தெரியவருகிறது. சிறுவன் ஏர்-கன் எனப்படும் ஒருவகை துப்பாக்கியைதான் கையில் வைத்திருந்துள்ளார். பொலிசார் இந்த விடையத்தில் தவறான முடிவை எடுத்துவிட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. சிறுவனை நோக்கி 2 முறை சுட்டதும், மேலும் அவன் காலில் சுடாமல் வயிற்றில் சுட்டது பொலிசார் பதற்றத்துடன் நிலமையை கையாண்டுள்ளார்கள் என்பதுபோலத் தெரிகிறது.

http://www.athirvu.com/newsdetail/1498.html

No comments:

Post a Comment