Wednesday, October 29, 2014

ஐ.எஸ்.ஐ.எஸ்-யை முந்தவேண்டும்: அல்கொய்தாவின் மாபெறும் சதி (வீடியோ இணைப்பு) !

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் கைப்பற்றியுள்ளதால், அவர்களை வீழ்த்த அல்கொய்தா அமைப்பினர் திட்டம் தீட்டியுள்ளனர்.
ஈராக்-சிரியாவில் ஆதிக்கத்தை நிலைநாட்டி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தங்களது அராஜக ஆட்சியால் பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் உலகளவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பெரும் வளர்ச்சி பெற்றதால், அவர்களை முந்தி செல்லும் நோக்கில் அல்கொய்தா அமைப்பினர் திட்டமிட்டனர்.
அதன் படி, தற்போது அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் கூட்டாளி அமைப்பான நுஸ்ரா பிரண்ட் (Nusra Front) என்ற அமைப்பு, வடக்கு சிரியாவின் இட்லிப் (Idlib) மாகாணத்தில் உள்ள பலான் (Baluon), கன்சப்ரா (Kansafra), அப்லின் (Ablin), அப்திதா (Abdita), முகரா (Mugara), மஷுன் (Mashun) ஆகிய கிராமங்களை கைப்பற்றியுள்ளது.
இந்த கிராமங்களை சிரிய ஜனாதிபதி அல் அசாதுக்கு எதிராக போராடி வரும் சிரிய புரட்சிப் படையினரிடமிருந்து தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்.
இப்பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளும் முன்னேறி வருவதால் அவர்களுக்கு முன்பாக இத்லிப்பைப் பிடிக்க அவர்கள் மும்முரமாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment