Sunday, September 21, 2014

இல்லத்தரசிகளை வைத்து களைகட்டிய விபச்சாரம்: சிக்கிய பொலிஸ்

மதுரையில் இல்லத்தரசிகளை வைத்து விபச்சாரம் நடத்திய 3 நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த பாலமுருகன் என்ற மாணவனின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் பென்னாடம் ஆகும். இவர் தூத்துக்குடியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார்.
இவர் 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்குப் போவதற்காக தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு சென்றுள்ளார். அங்கு மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது அவரிடம் 34 வயதான மாரிமுத்து என்பவர் அணுகியுள்ளார். என்னிடம் அழகு அழகான பெண்கள் இருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் என்று ஆசை காட்டியுள்ளார்.
இதையடுத்து முருகன் அவருடன் சென்போது, மீனாம்பாள்புரத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்று, அங்கு இரண்டு நடுத்தர வயதுள்ள பெண்களைக் காட்டியுள்ளார்.
அவர்களைப் பார்த்த முருகன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனக்கு வேண்டாம் என்று கூறி அங்கிருந்து வெளியேறி விட்டார்.
நேராக செல்லூர் காவல் நிலையம் சென்ற அவர் நடந்ததைக் கூறி புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் பொலிசார் நடவடிக்கையில் இறங்கிய போது, சம்பந்தபட்ட வீட்டில் 37 வயதான கலைச்செல்வி மற்றும் 32 வயதான பிரியா என்கிற ராதா ஆகியோர் சிக்கினர்.
இருவரும் திருமணமானவர்கள். கணவர், குழந்தைகளுடன் இருப்பவர்கள். இவர்களை மாரிமுத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.
மாரிமுத்துவையும் பொலிசார் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்தனர். விசாரணை யில் பொலிசாருக்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது.
மாரிமுத்து ஒரு புரோக்கர் ஆவார். இவரை வைத்து விபச்சாரத்தை நடத்தி வந்தவர் பாலமுருகன் என்ற பொலிஸ் ஆவார். இவர் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக இருந்து வருகிறார்.
மீனாம்பாள்புரத்தில் விபச்சாரம் நடந்த வீடு ஒரு பிராஞ்ச்தானாம். இதே போல நகரில் பல இடங்களில் வீடுகளை வாடகைக்குப் பிடித்து விபச்சாரத்தை பெரிய அளவில் நடத்தி வந்துள்ளார், இதையடுத்து பாலமுருகனிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment