ரிவிட்டரையும் , யூ-ரியூப்பையும் அதிகம் பயன்படுத்தும் இத்தீவிரவாதிகள், எங்கே இருந்து இதனை அப்-லோட் செய்கிறார்கள் என்று கண்டறிய முடியவில்லை. இதுவே அமெரிக்காவின் பெரும் பிரச்சனையாக உள்ளது. அமெரிக்காவில் உள்ள FBI, CIA மற்றும் பெண்டகன் ஆகிய உளவுத்துறையினர் தற்போது இதுதொடர்பாக ஆராய்ந்து வருகிறார்கள். சிக்காகோ நகரமே பொலிசார் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளது. அனைத்து தெருக்களையும், தீவிரவாதிகள் அனுப்பிய படம் சம்பந்தப்பட்ட இடத்தையும் பொலிசாரும் உளவுப் பிரிவினரும் சூழ்ந்துகொண்டுள்ளார்கள்.
ஆனால் குறித்த இப் படம் உண்மையில் அமெரிக்காவில் எடுக்கபப்ட்டது தானா என்ற சந்தேகம் நிலவுகிறது. அமெரிக்க பொலிசாரையும் உளவு நிறுவனத்தையும் திசை திருப்பவே தீவிரவாதிகள் இவ்வாறு செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் குறி வேறாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/847.html
No comments:
Post a Comment