Sunday, August 24, 2014

நாங்கள் உங்கள் நகரங்களில் உள்ளோம் ISIS தீவிரவாதிகள் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்கள் !

நாங்கள் உங்கள் நகருக்குள் வந்துவிட்டோம் ! ISIS தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள படங்களால், அமெரிக்கா சற்று நேரத்திற்கு முன்னர் திண்டாடிப்போயுள்ளது. இத்தீவிரவாதிகள் ரிவீட்டரில் குறிப்பிட்ட படங்களை வெளியிட்டுள்ளார்கள். அதாவது ISIS தீவிரவாதிகள் சிக்காக்கோ நகரில் உள்ள கட்டிடம் ஒன்றின் முன் நின்று படம் எடுத்துள்ளார்கள். அவர்கள் கைகளில் ஆயுதங்கள் உள்ளது. அதே படத்தை அவர்கள் ரிவீட்டர் மூலமாக வெளியிட்டு, நாங்கள் உங்கள் நகரில் தான் இருக்கிறோம். இனி தாக்குதல் ஆரம்பமாகும் என்று கூறியுள்ளார்கள். அதி நவீன தொழில் நுட்பத்தை பாவித்து அவர்கள் அறிக்கைகளை வெளியிடுவதால் , ஐ.பி இலக்கத்தை கூட அமெரிக்காவால் கண்டறிய முடியவில்லை.
ரிவிட்டரையும் , யூ-ரியூப்பையும் அதிகம் பயன்படுத்தும் இத்தீவிரவாதிகள், எங்கே இருந்து இதனை அப்-லோட் செய்கிறார்கள் என்று கண்டறிய முடியவில்லை. இதுவே அமெரிக்காவின் பெரும் பிரச்சனையாக உள்ளது. அமெரிக்காவில் உள்ள FBI, CIA மற்றும் பெண்டகன் ஆகிய உளவுத்துறையினர் தற்போது இதுதொடர்பாக ஆராய்ந்து வருகிறார்கள். சிக்காகோ நகரமே பொலிசார் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளது. அனைத்து தெருக்களையும், தீவிரவாதிகள் அனுப்பிய படம் சம்பந்தப்பட்ட இடத்தையும் பொலிசாரும் உளவுப் பிரிவினரும் சூழ்ந்துகொண்டுள்ளார்கள்.
ஆனால் குறித்த இப் படம் உண்மையில் அமெரிக்காவில் எடுக்கபப்ட்டது தானா என்ற சந்தேகம் நிலவுகிறது. அமெரிக்க பொலிசாரையும் உளவு நிறுவனத்தையும் திசை திருப்பவே தீவிரவாதிகள் இவ்வாறு செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் குறி வேறாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/847.html

No comments:

Post a Comment