சுவிட்சலாந்தின் சூரிச் மாநிலத்தில் வீற்றிருந்து மக்களின் துன்பங்களை தீர்த்தருளும் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான தேர் தீத்தத் திருவிழாக்கள் பல்லாயிரம் மக்கள் புடை சூழ கடந்த சனி ஞாயிறு தினங்களில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.
தாயகத்தின் பல பகுதிகளில் உள்ள முருகன் ஆலயங்கள் மிக சிறபபுடன் இருப்பது யாவரும் அறிந்தது அவற்றுக்கு ஈடாகும் வகையில் பல புலம் பெயர் நாடுகளில் பல ஆலயங்கள் சிறப்புடன் உள்ளமை குறிப்பிடத் தக்கது
அந்த ஒழுங்கில் சுவிட்சலாந்தின் சூரிச் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் தேர் கடந்த சனி வீதி உலா வரும் காட்சிகள் தாய் மண்ணிற்கு ஈடான தேற்றம் போல் அமைந்ததுடன் ஆலயத்தினை சுற்றிய விடாத மழை மத்தியிலும் தேர்ப்பவணியில் பல்லாயிரம் பக்தியுடன் மக்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
தீர்த்தம் ஆலயத்தின் அருகில் உள்ள கங்கையில் தீர்த்த நிகழ்வும் பல்லாயிரம் மக்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத் தக்கது.
லங்காசிறி மற்றும் சாலை டிவி தமது ஊடக அனுசரனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIRULdht4.html
No comments:
Post a Comment