Thursday, July 31, 2014

கணவர் கண் எதிரில் மனைவி பலாத்காரம்…

அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரத்தை சேர்ந்தவர் சிற்றரசு (வயது 33). இவர் கன்னியாகுமரியில் பொம்மை வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி மது (31). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் கொட்டாரம் பெரியவிளை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு அங்குள்ள குளக்கரை அருகே நடந்து சென்றனர். அப்போது அங்கு மது அருந்தி விட்டு போதையில் உட்கார்ந்து இருந்த 4 பேர், சிற்றரசை மனைவி மதுவை பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. உடனே சிற்றரசு கூச்சல் போட்டார். இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதை பார்த்ததும் 4 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுபற்றி கன்னியாகுமரி போலீசில் சிற்றரசு புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம் புதூரை சேர்ந்த அன்பரசன் (23), கொட்டாரத்தை சேர்ந்த நிகில் (20), மகாராஜபுரத்தை சேர்ந்த சின்னகண்ணன் (22) ஆகிய 3 பேர்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் மகாராஜபுரத்தை சேர்ந்த தில்லை (20) என்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment