அமெரிக்காவில் உள்ள புளோரிடோ கடற்கரையில் பட்டப்பகலில் பலரது முன்னிலையில் எவ்வித கூச்சமும் இன்றி செக்ஸ் உறவில் ஈடுபட்ட ஜோடியை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
அமெரிக்காவின் புளோரிடா பகுதியை சேர்ந்த Caballero மற்றும் Elissa Alvarez என்ற காதல் ஜோடி பீச்சில் நீச்சலுடையில் குளித்துக் கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் திடீரென கடற்கரையில் உள்ள மணலில் படுத்து செக்ஸ் உறவின் ஈடுபட ஆரம்பித்தனர். இதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு வயதான பெண், முதலில் காதலர் இருவரும் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டதாக எண்ணினார். ஆனால் சிறிது நேரம் கழித்து இருவரும் எழுந்து மீண்டும் கடலில் குளிக்க சென்றுள்ளனர்.
இந்த காட்சியை பார்த்துக்கொண்டிருந்த இன்னொருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் புளோரிடா பீச்சிற்கு வந்து செக்ஸ் உறவின் ஈடுபட்டிருந்த காதல் ஜோடியை கைது செய்தனர். பொது இடத்தில் அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தை படம்பிடித்த நபர் போலீஸாரிடம் கூறியபோது, கடற்கரையில் இயற்கை காட்சிகளை படமெடுத்துக்கொண்டிருந்ததாகவும், அப்போது இந்த காதல் ஜோடி கடலில் குளித்துவிட்டு திடீரென தரையில் படுத்து செக்ஸ் உறவில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். புகைப்படம் எடுத்த அந்த நபர் இந்த வழக்கின் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.