Monday, June 30, 2014

பெண்ணுக்கு நேர்ந்த கதியை கைதட்டி ரசித்த ஆண்கள் (வீடியோ இணைப்பு)


அமெரிக்காவில் தனியாக பூங்காவில் அமர்ந்திருந்த பெண்ணை ஒரு மர்ம பெண் கும்பல் கொடூரமாக தாக்கியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ப்ருக்ளின்ஸ் ப்ராஸ்பக்ட் பூங்காவில் தனியாக இருந்த பெண்ணை மர்ம கும்பல் ஒன்று தாக்கியது போல் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
பகல் நேரத்தில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை தடுக்க எவரும் வரவில்லை. மேலும் இதனை ஆண்கள் கும்பல் ஒன்று கைத்தட்டி ரசித்துள்ளது.
கைப்பேசியில் படம்பிடித்த இந்த காணொளியில் 3 பெண்கள், ஒரு பெண்ணின் தலைமுடியை இழுத்து கீழே தள்ளி, முகம் மற்றும் உடம்பின் மேல் பகுதியில் கால்களால் சரமரியாக தாக்கியுள்ளனர்.
பாதிக்கபட்ட பெண் புகார் கூறியதை அடுத்து பொலிசார் தற்போது தெளிவில்லாத காணொளியை வைத்து கும்பலை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து தேசிய அதிரடிப்படை உறுப்பினர் ஒருவர் கூறுகையில், இவர்களை போல் உள்ள கும்பல்களுக்கு கருத்துரை வழங்கி, இவ்வாறு சம்பவங்கள் நடப்பதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment