Monday, June 23, 2014

ஈராக்கில் உள்ள தீவிரவாதிகள் பலர் பிரித்தானியர்கள்: லண்டனில் பாரிய சதி நடக்கலாம் என எச்சரிக்கை !




தற்போது ஈராக்கில் உள்ள நகரங்களை கைப்பற்றிவரும் ( ISIS) என்னும் தீவிரவாத அமைப்பில், பல பிரித்தானிய இளைஞர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க பிரித்தானியாவில் வந்து குடியேறிய பல முஸ்லீம்கள் பிரிட்டிஷ் பாஸ்போட்டை எடுத்துவிட்டு , பின்னர் தற்போது ஈராக்கில் சண்டையில் ஈடுபட்டுள்ளார்கள். இதில் பல தகப்பன் மார்களும் அடங்குகிறார்கள். அவர்கள் இன்ரர் நெட் ஊடாக பிரித்தானியாவில் உள்ள தமது பிள்ளைகள், பிள்ளைகளின் நண்பர்களை தொடர்புகொண்டு, தீவிரவாத இயக்கத்தில் இணையவேண்டும் என்றும், நடைபெறும் இந்த யுத்தம் ஒரு புணித யுத்தம் என்றும் கூறிவருகிறார்கள். பிரித்தானியாவில் பேர்மிங்காம், கவுன்சிலோ, நொட்டிங்காம் என்று பல இடங்களில் முஸ்லீம்கள் செறிவாக வாழ்ந்து வருகிறார்கள்.
தற்போது பிரித்தானிய உளவு நிறுவனமான MI 6 இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரக்கில் தற்போது நகரங்களை கைப்பற்றி வரும் அமைப்புக்கு வெளிநாடுகளில் உள்ள பல முஸ்லீம்கள் ஆதரவாக உள்ளார்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் ஆதரவாக உள்ளார்கள். இதனால் பிரித்தானியாவுக்கு பெரும் ஆபத்து உள்ளதாக உளவு நிறுவனம் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளது. "ஓசாமா பின் பைபர்" அதாவது ஜஸ்டின் பைபர் என்று ஒரு பெரும் இளவயது பாப் பாடகர் உள்ளார், அது போல ஓசாமா பின் பைபர் என்ற பெயரில், பிரித்தானியாவில் ஒரு இசைக் குழு ஒன்று ஆரம்பிக்கப்பட்டு, அவர்கள் இசை ஊடாக தீவிரவாத அமைப்புகளுக்கு நாம் உதவேண்டும் என்று மறைமுகமாக பாடி வருகிறார்கள். இதனை யூ ரியூபில் வீடியோவாக ஏற்றி வருகிறார்கள்.
இதனால் பிரித்தானியாவில் உள்ள பல முஸ்லீம் இளைஞர்கள் ஜிஹாத் என்று சொல்லப்படும் யுத்தத்திற்கு தயாராகுங்கள் என்று மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெரும் ஆபத்தான விடையம் என்றும், முஸ்லீம் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று பிரித்தானிய உளவு நிறுவனம் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

No comments:

Post a Comment