ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளில், ராஜ குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகிறார்கள். பிரித்தானியாவை ஆண்ட எலிசபெத் மகாராணி போல, சூவிடன் நாட்டிலும் ராஜகுடும்பம் ஒன்று உள்ளது. சுவீடன் நாட்டு அரசாங்கத்தில் அவர்களுக்கு பவர் இல்லை என்றாலும், அன் நாட்டு அரசு அவர்களுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையைக் கொடுத்துவருகிறது. இன் நிலையில் சுவீடன் மகாராணி சில்வியாவுக்கு பிறந்த இளவரசர் கார்ல் பிலிப்ஸ், ஒரு பெண் ஆசை பிடித்த மனிதர் என்பது அனைவராலும் அறியப்பட்ட விடையம் ஆகும். சுவீடன் நாட்டு இளவரசர் என்பதனால் இவர் வலையில் பல பெண்கள் வீழ்வது உண்டு. அவர்களை கையாள்வதில் இவர் சிறந்தவர் என்று கூறப்படுகிறது.
இவர் வலையில் கடந்த வருடம் ஒரு மாடல் அழகியும் விழுந்து விட்டார். சோஃபியா என்னும் இந்த அழகி மாடலிங் மட்டும் செய்வது கிடையாது. ஆபாச புத்தகங்களுக்கும் அவர் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். இதனால் அவர் சர்சையிலும் மாட்டிகொண்டுள்ளார். இளவரசரின் அந்த புறத்து அழகியாக இருந்த இவரை, தற்போது மணம் முடிக்க தான் விரும்புவதாக பிலிப்ஸ் அவர்கள் தெரிவிக்க, மகாராணி சில்வியா அதனை ஏற்றுக்கொள்ளவே இல்லை. தாய்க்கு மகனுக்கும் இடையே ஒரு ஆண்டாக வாக்குவாதம் இடம்பெற்று வந்தது. இறுதியாக தாயார் இத்திருமணத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். அடுத்த வருடம் இவர்கள் திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/295.html
No comments:
Post a Comment