Tuesday, June 24, 2014

சற்று முன்னர் ஈராக்கின் மிகப்பெரிய எண்ணை ஆலை தீவிரவாதிகளின் கைகளில் வீழ்ந்தது ! லண்டனில் பெற்றோல் விலை அதிகரிக்கும் ?


ஈராக்கில் யுத்தம் புரியும்  ISIS தீவிரவாத இயக்கம், இன்று (செவ்வாய்க்கிழமை) சற்றுமுன், நாட்டின் மிகப்பெரிய எண்ணை சுத்திகரிப்பு மையம் "பைஜியை"  முழுமையாக கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த எண்ணை மையத்தை கைப்பற்றுவதற்காக கடந்த 10 நாட்களாக அங்கு யுத்தம் நடந்து கொண்டிருந்தது.எண்ணை மையத்தின் சில பில்டிங்குகள் ராணுவத்தின் கைகளிலும், சில பில்டிங்குகள் தீவிரவாத இயக்கத்தினர் கைகளிலும் இருந்தன என ஏற்கனவே எழுதியிருந்தோம்.
இப்போது, ராணுவத்தினர் அனைவரையும் அடித்து துரத்திவிட்டு, எண்ணை மையத்தை முழுமையாக கைப்பற்றியுள்ளது, தீவிரவாத இயக்கம்! இனி என்ன நடக்க இருக்கிறது என்பது எவருக்குமே தெரியாது. இதேவேளை இன்று மாலை முதல் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் பெற்றோல் மற்றும் டீசலின் விலை அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. எனவே ஐரோப்பாவில் உள்ள தமிழர்கள், உடனடியாக உங்கள் கார்களுக்கு FULL TANK பெற்றோலை அடித்து வைப்பது நல்லது. குறைந்தது pence அல்லது 4 pence  இதன் விலை அதிகரிக்கும்.

No comments:

Post a Comment