Sunday, June 29, 2014

உத்திரபிரதேச சகோதரிகள் 2 பேரும் கவுரக் கொலை: புது தகவல்!

உத்திரபிரதேச சகோதரிகள் 2 பேரும் கவுரவக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. புதிய தகவல் ஒன்றினை தெரிவித்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் பாடாவுன் கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய 2 சகோதரிகள் கடந்த மே மாதம் 27ம் திகதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார்கள்.
இந்நிலையில் மறுநாள் காலை இவர்கள் இருவரும் உஷாயித் கிராமத்தில் மாமரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்கள்.
அவர்களது பிணங்களை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனை செய்ததில், அதில் அவர்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
அதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சகோதரர்கள் பப்புயாதவ், அவதேஷ் யாதவ், உர்வேஷ் யாதவ் மற்றும் பொலிஸ்காரர்கள் சத்ரபால் யாதவ், சர்வேஷ் யாதவ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் உத்திர பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. அதை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
அதை தொடர்ந்து சி.பி.ஐ. பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்தில் சிறுமிகள் 2 பேரும் கற்பழிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.
அதே நேரத்தில் அவர்களது குடும்பத்தினரே கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர். இந்த தகவல் சிறுமிகளின் குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனை மற்றும் சூழ்நிலை தியானம் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment