Thursday, May 29, 2014

விமானத்தின் பாகங்கள் இலங்கை அளுத்கம கடலில் கண்டுபிடிப்பு, மலேசிய விமானத்தினுடையதா ?



விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் சிதைவுகள் சில இலங்கை அளுத்கம, மொரகல பகுதி மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிதைவுகள் மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
சிதைவுகள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, இது குறித்து விமானப் படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
மலேசிய விமானத்தினுடையதா ?
இத மாயமான மலேசிய விமானத்தினுடையதா என்கிற ஐயம் தம்மிடம் உள்ளதாக தெரிவிக்கும் மீனவர்கள் அதன் அமைப்பு மற்றும் அதனது தன்மையினை பார்க்கும் இடத்து அவ்வாறு உள்ளதாக கூறும் மீனவர்கள் குறித்த சில்லை மீட்டுள்ளனர்.
குறித்த சில்லு மொரகொல்ல சுற்றுலா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சில்லு தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRdLZivz.html

No comments:

Post a Comment