Friday, May 30, 2014

செல்போனைக் காட்டி சிறுமியை சீரளித்த ஆசாமி!

வெறும் இரண்டாயிரம் ரூபா செல்போணுக்கு ஆசைப்பட்ட 14 வயதுச் சிறுமியை தனது இச்சைக்காகக் கடத்திச் சென்ற இளைஞனை கோப்பாய்ப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

யாழ்.கல்வியங்காடு செம்மணி வீதியினைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியொருவரையே கடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக யாழ்.பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியசட்கர் டி.எம்.திலகரட்ண வெள்ளிக்கிழமை (30) தெரிவித்தார்.
யாழ். தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். உரும்பிராய் கிழக்கினைச் சேர்ந்த மேற்படி நபர் கடந்த செவ்வாய்க்கிழமை (27) குறித்த சிறுமியினைக் கடத்திச் சென்றதாக சிறுமியின் பெற்றோர்களினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். இச் சிறுமியிடம் தரம் குறைந்த செல்போன் ஒன்றைக் கொடுத்து அதில் தொடர்ந்து இவர் கதைத்து வந்ததாகவும் தெரியவருகின்றது. இதனால் ஏற்பட்ட தொடர்பிலேயே இச் சிறுமியை குறித்த நபர் கடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.jvpnews.com/srilanka/71286.html

No comments:

Post a Comment