Thursday, May 29, 2014

14 வயது சிறுமி வல்லுறவில் தந்தை, மாமா, தாத்தா, இரு சகோதரர்கள்!

14 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 5 பேரை கைது செய்ய கருவலகஸ்வெவ பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, மாமா, தாத்தா மற்றும் இரண்டு உறவுக்கார சகோதரர்களே கைது செய்யப்படவுள்ளனர். கருவலகஸ்வெவ சிறுவர் பிரதேச செயலாளர் பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் தாய் கட்டுநாயக்க பிரதேச ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிவதால் அங்கேயே தங்கியுள்ளார். தந்தை மற்றும் மூன்று தங்கைகளுடன் சிறுமி நெலிவெவ பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார்.
கடந்த வருடம் ஏப்ரல் 5ம் திகதி முதலில் சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன் பின்னர் உறவினர்களால் தொடர்ச்சியாக சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி புத்தம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment