பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் நேற்று 'Damad Shree' (மருமகன்) என்று பெயரிடப்பட்ட 6 பக்க புத்தகத்தையும் கூடவே காணொளியையும் பாஜக வெளியிட்டது.
அதில் ராஜஸ்தான், ஹரியானாவில் ராபர்ட் வத்ரா வாங்கிய நிலங்கள் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பிரசாத் கூறுகையில், குஜராத் வளர்ச்சி குறித்து விமர்சிக்கும் பிரியங்கா காந்தி, தன்னுடைய கணவர் ராபர்ட் வதேராவின் தனிப்பட்ட வளர்ச்சி குறித்து பதில் சொல்ல வேண்டும்.
ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை ராபர்ட் வதேரா வாங்கியுள்ளார். காங்கிரஸ் ஆட்சி புரியும் மாநிலங்களில் மட்டும் ராபர்ட் வதேரா நிலம் வாங்குவது ஏன்?
2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் எவ்வாறு ப.சிதம்பரம் காப்பாற்றப்பட்டாரோ, ரயில்வே ஊழல் வழக்கில் எவ்வாறு பவன்குமார் பன்சால் காப்பாற்றப்பட்டாரோ, நிலக்கரி ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங் எவ்வாறு காப்பாற்றப்பட்டு வரகிறாரோ, அதேபோல் ராபர்ட் வதேராவையும் காப்பாற்ற முயற்சி நடைபெற்று வருகிறது.
மேலும் வத்ரா நிலம் வாங்கியதில் விதிமுறைகள் மிகப் பெரிய அளவில் மீறப்பட்டுள்ளத என்று கூறியுள்ளார்.
|
No comments:
Post a Comment