Wednesday, April 23, 2014

மனித வாழ்க்கை வாழும் நாய்!

பிரித்தானியாவில் நாய் ஒன்று மனிதனைப் போன்று வாழ்ந்து வருகின்றது.
பிரத்தானியாவில் உள்ள வட டைன்சைட் நகரில் மெல் ஸ்டோக்ஸ் மற்றும் எலியட் அலெக்சாண்டர் ஆகியோர் வளர்த்து வரும் இந்த நாய்க்கு 2 வயதாகிறது.
Ollie the Weimaraner என்று பெயரிட்டுள்ள இந்த நாய் 4 அடி உயரம் மற்றும் 37 கிலோ எடை கொண்டது.
இந்நாய் ஐஸ் கிரீம் மற்றும் காபி என மனிதன் உட்கொள்ளும் அனைத்து பொருட்களையும் சாப்பிடுகிறது. மேலும் தானகவே சென்று குளித்துக் கொள்கிறது.
தெருவில் ஐஸ்கிரீம் விற்கும் வாகனம் வந்தால் போதும், உடனே ஒடிச்சென்று மற்றவர்களை முந்தி கொண்டு ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடும்.
இதுகுறித்து நாயின் உரிமையாளர் அலெக்சாண்டர் கூறுகையில், இந்நாய்யானது மற்ற நாய்கள் போல் இல்லாமல் தனி மாதிரியான வாழ்க்கை வாழ்வதால் அதன் கழுத்தில் ஒரு பணப்பை கட்டிவிட யோசிப்பதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment