Thursday, April 24, 2014

கனடாவில் எண்ணெய்-உண்ணும் பக்டீரியா திரிபை கண்டுபிடித்த இலங்கை மாணவி !!

மொன்றியல் மரியநொபொலிஸ் கல்லூரி மாணவியான 18-வயதுடைய நிவேதா பாலேந்திரா தனது சொந்த வீட்டின் கொல்லைப்புறத்தில் தண்ணீரில் உள்ள எண்ணெய் கசிவுகளை சுத்திகரிப்பதற்கான வழியை கண்டுபிடித்துள்ளார்.
இந்த இளம் விஞ்ஞானி {Pseudomonas fluorescens} சுடோமோனாஸ் வுளோறசென்ஸ் என்ற பக்டீரியாவின் ஒரு குறிப்பிட்ட திரிபு அவரது கொல்லைப்புறத்தில் வேரிடுவதை கண்டுபிடித்துள்ளார். இந்த பக்டீரியா உயிர்மகட்டுப்பாடு முறையில் { அதாவது எண்ணெய்கசிவுகளை கட்டுப்படுத்தும் கரிம தீர்வுகள்} பயன்படுத்தப்படுகின்றது.
மண் மாதிரிகளில் காணப்படும் ஏதாவது ஒரு பக்டீரியாவில் இத்தகைய எண்ணெய் உட்கொள்ளும் திறன் இருக்கின்றனவா என தான் பார்க்க விரும்பியதாக தெரிவித்துள்ளார்.
இந்த கண்டுபிடிப்பு இந்த 18-வயது மாணவியை எதிர்வரும் மே மாதம் லாஸ் ஏஞ்சல்சில் இடம்பெறவிருக்கும் இன்ரெல் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சிக்கு இறுதிப்போட்டியாளராக எடுத்துச் செல்கின்றது.
எனது திட்டம் எண்ணெய்கசிவை சுத்தப்படுத்த ஒரு சுற்றச்சூழலிற்கு ஏற்ற தீர்வாக அமையவேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டது. முக்கிய தூண்டுகோல் தண்ணீர் மாசுபடுதல் எனவும் இன்று நாம் எதிர்கொள்ளும் அழுத்தமான பிரச்சனை தண்ணீர் மாசுபாடு எனவும் தெரிவித்துள்ளார்.
தான் கண்டுபிடித்த இந்த பக்டீரியான தனித்துவமானதா இதற்கு முன்வு கண்டு பிடிக்கப்படாதா என்பதை தன்னால் சொல்ல முடியாதெனவும் டிஎன்ஏ வரிசைமுறை கண்டுபிடிப்பிற்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இதே நேரம் இவரது ஆய்வுகூட மேலதிகாரிகள் ஆய்வு கூடத்திற்கு இது ஒரு புதிய பக்டீரியாவென தெரிவித்துள்ளனர்.
நிவேதா மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் துறையில் ஆராய்ச்சியை தொடர விரும்புகின்றார்.
இவரது தாயார் றமணி தனது மகளின் சாதனைகள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி போன்றவற்றில் அவளது தெரிவுகளையிட்டு தான் பெருமை அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
- See more at: http://www.canadamirror.com/canada/25070.html#sthash.n2NivAR5.dpuf

No comments:

Post a Comment