Monday, April 28, 2014

அரங்கேறும் நிர்வாண பந்தயங்கள்: எதற்கும் தயாராகும் ரசிகர்கள்!

லிவர்போல் அணி வெற்றி பெற்றால் என்னுடைய மனைவியை நிர்வாணமாக ஓட வைப்பேன் என்று கால் பந்து ரசிகர் ஒருவர் வித்தியாசமான பந்தயத்தை கட்டியுள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் இங்கிலீஷ் பிரிமியர் கால்பந்து போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
நேற்று லிவர்போல் அணி செலிசா அணியுடன் மோதிய போட்டி லண்டனில் நடந்தது. இப்போட்டியில் லிவர்போல்அணி வெற்றி பெற்றால் தன்னுடைய ஆண் உறுப்பில் லிவர்போல் அணியின் லோகோவில் இடம் பெற்றுள்ள பறவையின் படத்தை டாட்டு குத்திக்கொள்வதாக ஒரு ரசிகர் நண்பர்களிடம் பந்தயம் கட்டியுள்ளார்.
ரஷித் என்ற மற்றொரு ரசிகர் லிவர்போல் அணி வெற்றி பெற்றால் அதே மைதானத்தில் தன்னுடைய மனைவியை நிர்வாணமாக ஓடவைப்பதாக பந்தயம் கட்டியுள்ளார். இவருக்கு மூன்று மனைவிகளும் ஐந்து குழந்தைகளும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நல்லவேளையாக நேற்று நடந்த போட்டியில் லிவர்போல் அணி 0-2 என்ற கோல் கணக்கில் செலிசா அணியிடம் தோல்வி அடைந்தது. இதனால் இந்த விபரீத பந்தயங்கள் நடைபெறாமல் போனது.
சமூக ஆர்வலர்கள் இது போன்ற விவகாரமான பந்தயங்களை ரசிகர்கள் மேற்கொள்வதற்கு தடைவிதிக்க வேண்டும் என இங்கிலாந்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment