Saturday, April 26, 2014

இரண்டு வாகனங்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: தந்தையும் மகளும் படுகாயம்



மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாண்டவன்வெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் நபரொருவரும் 10 வயது சிறுமியும் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் ஓட்டமாவடியை சேர்ந்த நளீர் (வயது 24) மற்றும் அவருடன் வந்த 10 வயது சிறுமியும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
திருமலை வீதியில் தாண்டவன்வெளி சந்தியில் குறுக்கே வந்த சிறிய கன்டர் வாகனத்துடன், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இந்த விபத்தின்போது மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டி ஒன்றின் மீதும் மோதியதன் காரணமாக முச்சக்கர வண்டியும் சேதமடைந்துள்ளது.
மோட்டார் சைக்களில் வந்தவரின் கால் முறிந்து பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளார்.
மட்டக்களப்புப் பொலிஸார் விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyERaLXfr5.html

No comments:

Post a Comment