கேரள மாநிலம் திருச்சூர் கத்தோலிக்க மறைமாவட்டத்துக்கு உட்பட்ட தளிக்கட்டுச்சேரியிலுள்ள புதினி பவுல் தேவாலயத்தில் பாதிரியாக இருப்பவர் ராஜு கொக்கன் (44).
இந்த தேவாலயத்துக்கு வழக்கமாக வரும் குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமி மீது ராஜு கொக்கனுக்கு காம எண்ணம் இருந்து வந்துள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு தேவாலயம் வந்த அச்சிறுமியை தனது அறைக்கு அழைத்து சென்ற பாதிரியார், அச்சிறுமியின் ஆடைகளை அவிழ்த்து அதை கைப்பேசியில் படம் பிடித்துள்ளார்.
பாதிரியாரின் செய்கையால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளாள். இதையடுத்து பாதிரியார் மீது சிறுமியின் பெற்றோர் திருச்சூர் காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்துள்ளனர்.
புகாரின்பேரில் பாதிரியார் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைப்பேசியில் ஆபாசமாக படம் பிடித்ததுள்ளதால் அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழும் வழக்குப்பதிவாகியுள்ளது.
புகார் பற்றிய தகவலறிந்த பாதிரியார் தலைமறைவாகிவிட்டார் திருச்சூர் மறைமாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஜியோகடவில் இதுகுறித்து கூறுகையில், நாங்கள் உண்மையை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றும் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் தேவாலய சட்டப்படி பாதிரியார் ராஜு கொக்கன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
http://www.newindianews.com/view.php?224MM303lOe4e2DmKcb240Mdd304ybc2mDDe43Ol30226AK3 |
No comments:
Post a Comment