Monday, August 5, 2013

- ஈரானில் புதிய அதிபர் பதவியேற்பு !


ஈரானில் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்ட ஹசன் ரொஹானி நேற்று பதவியேற்றுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. இவரது பதவியேற்பு நிகழ்வில், சிறிலங்காவின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் பெற்றோலியத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட 11 நாடுகளின் அதிபர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பதாக, ஈரானிய உயர்சபையின் இராஜதந்திரப் பணியகத்துக்கான பணிப்பாளர் மொகமட் யஸ்ரெபி தெரிவித்திருந்தார்.
எனினும் சிறிலங்கா அதிபர் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஈரானின் முன் நாள் அதிபராக இருந்த மொஹ்மூட் அஹ்மடினிஜாட் சிறிலங்கா அதிபருக்கு மிகவும் நெருக்கமான நண்பராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment