Saturday, August 31, 2013

அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் பெண் ஊழியரை விபச்சாரியாக்கிய பொலிஸார்!


அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் பெண் ஊழியர் விபச்சாரத்தில் ஈடுபட்டார் என்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக கஸ்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் நடந்த வழக்கொன்றின் போது தெரியவந்தது.
மக்கள் மத்தியில் எயிட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அரசசார்பற்ற நிறுவனத்தை சேர்ந்த இந்த பெண் ஊழியர், ஆணுறைகளை விநியோகித்து கொண்டிருந்த போதே கல்கிஸ்சை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் இந்த பெண்ணுக்கு பிணை வழங்கக் கூடாது என பொலிஸார் நீதவானிடம் கேட்டுக்கொண்டதை அடுத்து, நீதவான் ரங்க விமலசேன அந்த பெண்ணை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சந்தேக நபரான பெண் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, சந்தேக நபர் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள எயிட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டத்தின் உறுப்பினர் என குறிப்பிட்டார்.
இதனை உறுதிப்படுத்த அவரிடம் ஆவணங்கள் இருப்பதாகவும் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் இரவு நேரங்களில் வீதிகளில் இருப்பதால், இரவு நேரத்தில் ஆணுறைகளை விநியோகித்து கொண்டிருந்த போது அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIQVMWmo2.html#sthash.y550r80j.dpuf

No comments:

Post a Comment