Friday, June 7, 2013

தமது போர்கப்பலை வெடிக்கவைத்த நோர்வே !

தமது நாட்டு போர்கப்பலை தாமே ஏவுகணை கொண்டு தாக்கிப் பார்த்திருக்கிறார்கள் நோர்வேப் படையினர். தாம் புதிதாகத் தயாரித்துள்ள ஏவுகணை ஒன்றை நோர்வே நாடு இன்று பரீட்சித்துப் பார்த்துள்ளது. வழமையாக இவ்வாறு ஏவுகணைகளை நாடுகள் பரீட்சித்து பார்க்கும்போது காலியான கட்டிடங்கள் இல்லை என்றால் பாலைவனங்களில் சோதித்துப் பார்ப்பார்கள். ஆனால் நோர்வே நாடு தனது போர்க்கப்பல் ஒன்றின் மீது இதனை நடத்திப் பார்த்துள்ளது. அதி தூரம் சென்று, நகர்ந்துகொண்டு இருக்கும் ஒரு டாகட்டை தாக்க வல்ல இந்த ஏவுகணையை பரிசோதிக்க விரும்பிய நோர்வே , தனது நாட்டின் பழைய போர் கப்பல் ஒன்றை கடலில் செலுத்தி பின்னர் அதனை குறிவைத்து இந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த ஏவுகணைத் தயாரிப்பில் நோர்வே வெற்றியடைந்துள்ளது. அத்தோடு மட்டுமல்லாது இத் தாக்குதல் நடவடிக்கையை வீடியோவில் கூட பதிவுசெய்துள்ளார்கள். காணொளி இணைப்பு.





No comments:

Post a Comment