Thursday, May 30, 2013

சுழி க்குள் குதித்து வீடியோ எடுத்தார்


கடல் மற்றும் ஏரிகளில் தோன்றும் சுழி யானது மிகவும் சக்திவாய்ந்தது. தண்ணீரில் சுழி தோன்றினால் அதனுள் ஒருவர் இழுக்கப்பட்டால் அவர் இறந்துவிடுவார். இதில் இருந்து தப்புவது என்பது மிகவும் கடுமையான விடையம். ஆனால் அதனையும் பொருட்படுத்தாது ஒரு நபர் பிரித்தானியாவில் உள்ள கோன் வோல் என்னும் இடத்தில் சுழி ஒன்றுக்குள் குதித்துள்ளார். இவர் தண்ணீருக்கு அடியில் செல்லும்போது தனது கமராவையும் எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் அவர் நினைத்ததை விட அச் சுழியானது மிகவும் சக்தி வாய்ந்தது. அதனால் அவரை அச் சுழியானது இழுத்துக்குகொண்டு அடிவரை சென்றுள்ளது. 

பின்னர் சடலமாகவே அவர் மிதந்துள்ளார். சடலத்தை கைப்பற்றிய அவரது நண்பர்கள் உடனடியாக பொலிசாருக்கு அறிவிக்க, அவரது இக்கட்டான நிலையை உணர்ந்த மருத்துவமனை உலங்கு வானூர்தியை அனுப்பி நேரடியாக வைத்தியசாலைக்கு அவரைக் கொண்டு சென்று சிகிச்சை அழித்துள்ளார்கள். இருப்பினும் குற்றுயிரும்குலையுமாக இருந்த அவ்ர் இறந்துவிட்டார். அவர் நினைவாக யூ ரியூபில் இக் காணொளி பிரசுரிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இன் நபர் ஏற்கனவே ஒரு முறை இவ்வாறு ஒரு சுழிக்குள் சென்று வீடியோ எடுத்து யூ ரியூபில் போட்டுள்ளார். அந்த குறிப்பிட்ட வீடியோ மில்லியன் கணக்கான வாசகர்களைக் கவர்ந்தது. ஆனால் இம் முறை அவர் மேற்கொண்ட முயற்ச்சி அவருக்கு எமனாக அமைந்துவிட்டது. 



No comments:

Post a Comment