Tuesday, April 2, 2013

ஒழுக்கமான தலைவர்கள் தேவை’ – அஜித்!


ajith

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் வலை படத்தின் படப்பிடிப்பு கடைசிகட்டத்தில் இருக்கிறது. அரசியல் கூட்டங்கள் மற்றும் விழாக்களிலும், சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதை தவிர்க்கும் அஜித், இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்காக தமிழ்த்திரையுலக நடிகர்கள் சங்கம் நாளை நடத்தவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்திற்காக தான் நடிக்கவிருந்த படத்தின் பூஜையை தள்ளி வைத்திருக்கிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பேசிய அஜித் “ இன்றைய ரசிகர்களின் மனநிலையை வைத்து பார்த்தால் ஹீரோ, வில்லன் இல்லாமல் ஒரு படம் எடுப்பது மிகவும் கஷ்டம். ஆனால் அந்த ஹீரோவோ வில்லனோ குறிப்பிட்ட ஜாதியையோ மதத்தையோ சார்ந்தவனாகவும், வக்கீலாகவோ, டாக்டராகவோ இருக்கக்கூடாது.
இதையெல்லாம் மீறி ஒரு படம் எடுக்கப்பட்டால், அதை எதிர்த்து சம்மந்தப்பட்ட அமைப்போ மக்களோ போராட்டம் செய்கிறார்கள். ஏராளமான புதிய அமைப்புகளும், கட்சிகளும் உருவாகி வருகின்றன. அரசியல் லாபத்திற்காகவும், விளம்பரத்திற்காகவுமே இத்தகைய எதிர்ப்புகள் ஏற்படுகின்றன. நாட்டில் ஒழுக்கம் இல்லை. நல்ல தலைவர்கள் தேவையாக இருந்தாலும் மக்களும் ஒழுக்கத்துடன் இருக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment