சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பேசிய அஜித் “ இன்றைய ரசிகர்களின் மனநிலையை வைத்து பார்த்தால் ஹீரோ, வில்லன் இல்லாமல் ஒரு படம் எடுப்பது மிகவும் கஷ்டம். ஆனால் அந்த ஹீரோவோ வில்லனோ குறிப்பிட்ட ஜாதியையோ மதத்தையோ சார்ந்தவனாகவும், வக்கீலாகவோ, டாக்டராகவோ இருக்கக்கூடாது.
இதையெல்லாம் மீறி ஒரு படம் எடுக்கப்பட்டால், அதை எதிர்த்து சம்மந்தப்பட்ட அமைப்போ மக்களோ போராட்டம் செய்கிறார்கள். ஏராளமான புதிய அமைப்புகளும், கட்சிகளும் உருவாகி வருகின்றன. அரசியல் லாபத்திற்காகவும், விளம்பரத்திற்காகவுமே இத்தகைய எதிர்ப்புகள் ஏற்படுகின்றன. நாட்டில் ஒழுக்கம் இல்லை. நல்ல தலைவர்கள் தேவையாக இருந்தாலும் மக்களும் ஒழுக்கத்துடன் இருக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment