இந்தப் பள்ளிக்கு டிஸ்லெக்சியா குறைபாடு உடைய 16 வயது மாணவன் ஒருவனை அவனுடைய தாயார் அழைத்து வந்தார். கோபத்தால் உண்டாகும் பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டி தன் மகனை இந்தப் பள்ளியில் சேர்த்துவிட்டு சென்றார். மனநல ஆலோசகராக அவனுக்கு உதவி புரியவந்த கலகனும் அந்த மாணவனும் வெகு விரைவிலேயே நெருக்கமாகப் பழகத்துவங்கினர்.
அடிக்கடி அவர்கள் இருவரையும் ஒன்றாக வெளியிடங்களில் பார்த்தபோது, அவர்களுடைய தொடர்பு ஊர்ஜிதம் ஆனது. தனது வேலையை ராஜினாமா செய்த கலகன், அந்த மாணவனுடன் தனிக் குடித்தனம் துவங்கிவிட்டார். கோபமுற்ற மாணவனின் தாயோ பள்ளியின் பொறுப்பாளர்களைத்தான் திட்டித் தீர்க்க முடிந்தது.
இது முறையற்றது என்ற போதிலும் அவர்கள் இருவரும் சகஜமாக இருக்கின்றனர் என்று குழந்தைகள் பாதுகாப்பு குறித்து புலனாய்வு செய்யும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment