Sunday, August 19, 2012

சர்ச்சையான அரை நிர்வாணப் படம்!



நடிகை ஸ்ரேயா ஒரு ஆங்கில மாத பத்திரிக்கைக்கு அளித்திருந்த அரை நிர்வாண படங்கள் பற்றி ஏற்கனவே“டாப் நடிகயின் டாப்லெஸ் படங்கள்” என்ற தலைப்பில் விவரித்திருந்தோம். அந்த சமயத்தில் ஸ்ரேயாவின் ஃபோட்டோக்கள் மட்டும் தான் பரபரப்பாக பேசப்பட்டன.
இப்போது ஸ்ரேயாவே பரபரப்பாகிவிட்டார். அந்த ஃபோட்டோக்களை பற்றி பேசிய ஸ்ரேயா” திரையுலகில் இப்போது போட்டி அதிகமாகிவிட்டது. இதுபோல ஏதாவது செய்தால் தான் நிலைத்திருக்கவும் முடியும், வாய்ப்புகளும் கிடைக்கும். இதேபோல் கவர்ச்சியாக நான் ஏற்கனவே ஃபோஸ் கொடுத்துள்ளேன்.
அப்போது கிடைத்ததை விட இப்போது அதிக வரவேற்பு கிடைக்கும்” என்று கூறினார். அரை நிர்வாண ஃபோட்டோவுக்கு ஃபோஸ் கொடுத்த ஸ்ரேயாவின் நோக்கத்தை அறிந்த இந்து மக்கள் கட்சியினர் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர். குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” நடிகை ஸ்ரேயாவின் அரை நிர்வாண படங்கள் கலாச்சார சீரழிவின் உச்சம். உடலை ஆபாசமாகக் காட்டி புகழ் தேடும் நிலைக்கு அவர் வந்து விட்டார்.
சினிமாவில் நிலைக்கவும் சக நடிகைகள் போட்டியை எதிர் கொள்ளவும்தான் இப்படி போஸ் கொடுத்தேன் என்று அவரே சொல்வது தான் தாங்க முடியாதது.நடிப்புத் திறமையால் சினிமாவில் நிலைத்திருந்த காலம் போய் உடம்பை ஆபாசமாக காட்டி நிற்க வேண்டிய நிலை வந்துவிட்டது. ஸ்ரேயா நடிப்பாற்றலை வெளிப்படுத்தி சினிமாவில் நிலைத்து இருக்க முயன்றிருக்கலாம். உடம்பை காட்டித்தான் உயர முடியும் என்று எண்ண வேண்டாம். இதுபோல் ஆபாச போஸ் கொடுத்து இளைய தலைமுறையினர் மனதில் நஞ்சு பாய்ச்சுவதை ஸ்ரேயா நிறுத்திக்கொள்ள
வேண்டும்” என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment